அண்ணா அருகில் இடம் இல்லாவிட்டால் எப்படி?
கொஞ்சமும் அரசியல் அனுபவம் இல்லை என்பதையும், முதல்வராக இருக்க தகுதியற்றவர் என்பதையும் பழனிச்சாமி நிரூபித்துகொண்டிருக்கின்றார்
தமிழகம் அதன் அரசியல் தலைமகனை இழந்திருக்கின்றது, ஒரு வித சோகமும் ஆற்றாமையும் வெறுமையும் சூழ்ந்திருக்கும் நேரமிது
அந்த மிக உணர்ச்சி கொந்தளிப்பான நேரத்தை பக்குவமாக கையாளாமல் பெரும் வன்முறை வெடிக்கும் அளவிற்கு சிக்கலாக்கி கொண்டிருக்கின்றார்
இது சாதாரண விஷயம் அல்ல
அண்ணாவினை மெரினாவில் புதைத்தது கலைஞர், ராமசந்திரன் புதைக்கபடும் பொழுது கொஞ்சமும் எதிர்ப்பு காட்டாமல் கண்ணீர் விட்டவர் கலைஞர்
அவருக்கே அண்ணா அருகில் இடம் இல்லாவிட்டால் எப்படி?
பழனிச்சாமி கொஞ்சம் சிந்திக்க வேண்டும், கலைஞர் இல்லாவிட்டால் ராமசந்திரன் இல்லை, அதிமுக இல்லை, ஜெயா இல்லை இந்த பழனிச்சாமியும் இல்லை
மூல ஊற்று அந்த கலைஞர்
அவருக்கு காட்டும் நன்றிகடன் இதுதானா பழனிச்சாமி, ஒரு சிக்கலான நேரத்தை இப்படித்தான் கடப்பார்களா?
திமுக எனும் இயக்கம் பெரும் சோகத்தில் இருக்கும்பொழுது இப்படி நோகடித்து அவர்களின் பொறுமையினை சோதிப்பதை யாராலும் ஏற்றுகொள்ள முடியாது
தயவு செய்து இந்நேரத்தில் நல்ல முடிவு எடுங்கள்
இல்லாவிட்டால் நடக்கபோகும் எல்லா களபேரங்களுக்கும் நீரே முடிவு
தயவு செய்து திமுகவினர் உணர்ச்சிகளோடு விளையாட வேண்டாம் இதன் விளைவுகள் நிச்சயம் மகா மோசமாக இருக்கும்
அவகாசம் கொஞ்சம்தான் இருக்கின்றது பழனிச்சாமி, தயவு செய்து தமிழக அமைதியினை நிலைக்க விடுங்கள், வரலாற்று பழியினை ஏற்றுகொள்ளாதீர்கள்