ஜெயாவிற்கு ஒரு நீதி , கலைஞருக்கு ஒரு நீதியா?

பதவியில் இருக்கும் முதல்வர்களுக்கு தான் மெரினா கடற்கரையில் இடம் தர வேண்டும் : ஆடிட்டர் குருமூர்த்தி

அண்ணாவோ, ராமசந்திரனோ, ஜெயாவோ செத்தவுடன் அவர்கள் முன்னாள் முதல்வரே

அண்ணா அடக்கம் செய்யபடும்பொழுது நெடுஞ்செழியன் தற்காலிக முதலமைச்சர்

ஜெயா அடக்கம் செய்யபடும்பொழுது பன்னீர் தற்காலிக முதலமைச்சர்

பின் எப்படி ஜெயாவினை அடக்கம் செய்தார்கள்?

ஜெயா படுக்கையில் வீழ்ந்து 75 நாட்களாக மக்கள் முன் வரவில்லை, அன்றைய ஆளுநரின் நியமணத்தின் படி பன்னீர்தான் முதல்வர்

பின் எப்படி ஜெயா அங்கே புதைக்கபட்டார்?

ஜெயாவிற்கு ஒரு நீதி , கலைஞருக்கு ஒரு நீதியா?

அந்த மனிதன் இருக்கும்பொழுது தொட்டுபார்க்க முடியாதவர்கள், அவர் மயிரை கூட தொடமுடியாதவர்கள் எல்லாம் காலத்தால் அவன் வீழ்ந்தபின் ஆடி பார்க்கின்றார்கள்

அந்த காட்டாறு பொங்கிய பொழுதெல்லாம் அஞ்சியவர்கள், அது காலத்தால் வற்றியபின் அதில் நடக்க பார்க்கின்றார்கள்

அவ்வளவு வன்மம் அவர் மேல் இருந்திருக்கின்றது

எடப்பாடி எடுப்பார் கைபிள்ளை, அவருக்கு உத்தரவு எங்கிருந்தோ வந்திருகின்றது அவர் சொல்லி கொண்டிருக்கின்றார் பாவம்

கலைஞருக்கு மெரினாவில் இடம் ஒதுக்குவதே நல்ல தீர்வாக இருக்கமுடியும்

இந்த ஆடிட்டர் குருமூர்த்தி யார்?

நீதிபதியா? பிரதமரா? முதல்வரா? தலமை செயலரா? சென்னை ஆட்சியரா? இல்லை நீதிபதி அருகே நிற்கும் டவாலியா

இவருக்கு இப்படி சொல்லும் உரிமையினை யார் கொடுத்தது?


கலைஞர் வரலாற்றை அறிக்கையிட்டு வைகோ உருக்கம் :செய்தி

Image may contain: 1 person, sitting and close-upகலைஞரின் 25 வருட கண்ணீருக்கும் வேதனைக்கும் மகா முக்கிய காரணமாக இருந்தவர் வைகோ

அந்த குழியில் இவரை முதலில் போட்டபின்பே கலைஞர் உடலை வைக்க வேண்டும்


“ஆறாது ஆறாது அழுதாலும் தீராது
ஆனாலும் வழி என்ன தாயே…”

தன் தந்தையினை பிரிந்துவாடும் தலைவிக்கு, கலைஞர் பெற்றெடுக்காத மகளுக்கு ஆறுதல்கள்