கலைஞருக்கு கூடியிருக்கும் கூட்டம் சாதாரணம் அல்ல
நிச்சயம் கலைஞருக்கு கூடியிருக்கும் கூட்டம் சாதாரணம் அல்ல, மிக பெரும் கூட்டம்
முறையாக கணக்கெடுக்கும் பட்சத்தில் உலக சாதனையான அதாவது அண்ணாவிற்கு கூடிய அஞ்சலி செலுத்த கூட்டத்தை விட இது அதிகமாக இருக்கும்
அண்ணாவின் சாதனையினை தம்பி முறியடிப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை
“நீர் திரட்டிய கூட்டத்தை அப்படியே 50 ஆண்டுகாலம் வைத்திருக்கின்றேன் பாருங்கள்” என மிக பெருமையாக சொல்வதற்கு அண்ணா சமாதி நோக்கி செல்கின்றார் கலைஞர்..
கலைஞர் என்பவர் எத்தனை கோடி மக்களை வசீகரித்தார் என்பதன் விஸ்வரூபம் தெரியும் நேரமிது
ஏதோ ஒரு படத்தில் ரங்கராவ் சிவாஜியிடம் சொல்வார் “எங்களை விட்டு போடா”
சிவாஜி சொல்வார் “உயிர பிடுங்கி வைக்க சொல்றீங்கே மாமா, நான் எங்கே போவேன்”
கலைஞரின் கடைசி பயணத்தை பார்க்கும்பொழுது உயிரை பிடுங்கி வைத்தது போலவே இருக்கின்றது
பொதுமக்கள் ஏராளமானபேர் அழுகின்றார்கள், கலைஞர் குடும்பத்தில் ஒரு உயிர் உண்மையாக அழுகின்றது, ஆம் உண்மையான பாசத்தில் அழுகின்றது
அவள் பெயர் செல்வி
இவ்வளவிற்கும் கட்சியிலோ, இல்லை வேறு சொத்துவிஷயங்களிலோ அவர் பெயர் வந்ததே இல்லை
கதறி கதறி அழுகின்றார் அந்த பெண்
அதன் பெயர்தான் பாசம் என்பது, அவள் அழும்பொழுது நமக்கெல்லாம் கண்களில் நீர் அருவியாக கொட்டுகின்றது