கலைஞர் தேசியவாதி அல்ல, தேசியத்தை வெறுத்தவரும் அல்ல
கலைஞர் தேசியவாதி அல்ல, தேசியத்தை வெறுத்தவரும் அல்ல
ஒன்றுபட்ட இந்தியாவில் தமிழக உரிமைகளை காத்து நின்ற போராளி, அதே நேரம் இந்திய ஒருமைபாட்டையும் காத்தார் புலிகள் காலத்து சர்ச்சைகளை தவிர
ராமசந்திரன், வைகோ முதல் எத்தனையோ பேரை நம்பி ஏமாந்த கலைஞர் பிரபாகரனையும் நம்பி ஏமாந்தார், அதன் பின் விழித்தார்
மற்றபடி இந்திய தேசியத்துடனான தோள்கொடுப்பில் அவர் பின் வாங்கவே இல்லை
அந்த மாபெரும் தலைவனுக்கு இத்தேசம் செய்ய வேண்டிய மரியாதையினை சரியாக செய்கின்றது
ராணுவ மரியாதை முதல் டெல்லியில் தேசியகொடி அரைகம்பில் பறந்தது , தேசிய தலைவர்கள் எல்லாம் வந்து வணங்கியது எல்லாம் இத்தேசம் அவர்மேல் கொண்டிருந்த அபிமானத்தை காட்டுகின்றது
இவ்வளவிற்கும் கலைஞர் நாடாளுமன்ற வாசலை மிதித்தவர் அல்ல, பெரும் பதவியில் அமர்ந்தவரும் அல்ல
ஆனால் அவரையும் டெல்லி புரிந்து மதித்து வந்திருக்கின்றது
இந்த தேசத்தின் அதிகார வட்டத்திற்கு நன்றிகள் , மோடி முதல் ராகுல் வரை எல்லோருக்கும் நன்றிகள்
இந்திய தேசியத்தின் மதிப்புமிக்க தலைவராக விடைபெறும் கலைஞருக்கு கண்ணீருடன் கை அசைக்கின்றோம்
சன் டிவியில் கலைஞர் ஊர்வலத்தில் பிண்ணணி பேசுகின்றார்கள் எப்படி?
ராணுவ வாகனத்தில் கம்பீரமாக செல்கின்றார் கலைஞர், நல்லது
உண்மை என்ன?
இந்திய ராணுவ மரியாதை என்பது பெரும் மரியாதைகுரிய விஷயம், கலைஞருக்கு கொடுக்கின்றார்கள்
எந்த கலைஞருக்கு?
இதே இந்திய ராணுவம் இலங்கையில் இருந்து திரும்பும்பொழுது வரவேற்கமாட்டேன் என அவர்களை அவமதித்த அதே கலைஞருக்காக
உண்மையில் திமுகவின் தோல்வி இது
அந்நிய நாட்டு தீவிரவாதியுடன் மோதி 1500 பேரை இழந்த பொழுது, ஏராளமான வீரர்கள் அங்கம் இழந்தபொழுது அந்த தீவிரவாதிகளுக்கு இங்கு சிசிச்சை அளித்தவர் கலைஞர்
இந்திய தேசிய ராணுவம் மிகபெரும் அவமானத்தை கலைஞரிடமும் தமிழக ஈழ அபிமானிகளிடமும் 1989ல் பட்டது
ஆனால் அதை எல்லாம் மறந்து இந்திய தலைவன் என்ற பெருந்தன்மையில் அவருக்கு மிகபெரும் கவுரவத்தை அளிக்கின்றது எம்பெருமை மிகு ராணுவம்
கலைஞரின் ஆன்மா இப்பொழுது என்ன நினைக்கும் என தெரியாது, ஆனால் 2009ல் இந்திய தேசியவாதியாக நின்றதால் அந்த களங்கம் தீர்ந்தது
எமது பெருமைகுரிய இந்திய ராணுவமே
இந்தியராய் வந்து நிற்கும் உங்களுக்கு எங்களின் கம்பீர சல்யூட்
எலேய்,.. இந்த் யழவு மனுஷ் அங்கும் ஏதோ கவிதை வாசித்து இம்சிக்கின்றான்
கலைஞர் இறந்ததை விட பெரும்சோகம் இது, அவனை பிடித்து வங்க கடலில் எறியுங்கள்
ஏதோ கலைஞர் அண்ணா இறந்தபொழுது உருக்கமான வசனம் வாசித்த கலைஞர் போல தன்னை எண்ணி கொண்டு உளறிகொண்டிருக்கின்றான்
இடையில் தொண்டனுக்கு சிறுநீர் கழிக்க இடமில்லை என இம்சை வேறு
கலைஞரின் இந்து சர்ச்சைகளை எல்லாம் கிளறி ஏதோ வம்பு செய்துகொண்டிருக்கின்றான்
கலைஞருக்கு ஏதும் செய்வதாக இருந்தால் அவன் கையில் இருக்கும் பேப்பரை கிழித்து எறியுங்கள்’
ஓட்டை ரெக்கார்டு போல சொன்னதையே சொல்லிகொண்டிருக்கின்றான்
எலேய் மெண்டல் அநியாயம் நிகழ்ந்தால் ஆழிபேரலை எழுமா?
எதற்கு சென்னை முழுக்க அழியவா? இது கவிதையா மெண்டல் மண்டையா
1940களில் இந்தியா முழுக்க ராட்டை கொடி பறந்தபொழுது தமிழகத்தில் கருப்புகொடி பறந்தது, அதில் தன் ரத்தத்தால் பொட்டு வைத்து திராவிட கழக கொடியினை உருவாக்கினார் கலைஞர்
அந்த கொடி வீரமணியிடம் சிக்கிவிட்டது
அதன் பின் திமுக எனும் கருப்பு சிகப்பு கொடி பிடித்து இறுதிவரை நின்றார், இடையே தமிழ்மாநில கொடி என ஒன்றை அறிமுகபடுத்தினார்
ஆனால் இன்றோ அவர் உடலில் போர்த்தபட்டிருப்பது தேசிய கொடி
நிச்சயமாக விஷயம் அறிந்தவர்கள் சொல்வார்கள், அவர் உடலில் இறுதியாக போர்த்தியிருக்க வேண்டியது திராவிட கழக கொடி அல்லது திமுக கொடி அல்லது அவர் உருவாக்கிய தமிழக கொடி
ஆனால் அது இல்லை
இதுபற்றி எல்லாம் நாம் பேசினால் ஓடிவந்து அடிப்பார்கள்
வாழ்நாளெல்லாம் உண்மையான திராவிட கொள்கையினை சுமந்தவருக்கு அவரின் இறுதி ஊர்வலத்தில் சறுக்கலே நிகழ்ந்திருக்கின்றது