கலைஞருக்கு பாரத ரத்னா கொடுக்கப்பட வேண்டும் : திருமா

கலைஞருக்கு பாரத ரத்னா கொடுக்கப்பட வேண்டும் என திருமா சொன்னதற்கு பலர் பொங்குகின்றார்கள்

கலைஞர் இந்திய இறையாண்மையினை மீறி இலங்கை புலிகளுக்கு உதவியவர், முன்பொரு தனி திராவிட நாடு கேட்டவர், டெல்லி பக்கம் வந்தவர் அல்ல, தேசிய தலைவர் அல்ல , தேசியமொழியினை ஏற்றவர் அல்ல‌ என ஏகபட்ட எதிர்வாதங்கள்

நாம் ஒன்றே ஒன்றுதான் கேட்கின்றோம்

இதே பாரத ரத்னா விருது பெற்ற ராமசந்திரன் யார்?

அவரும் திராவிட நாடு கேட்ட கும்பலில் இருந்தார், இந்தி எதிர்த்தார், ராஜிவ் காந்தியிடமே புலிகள் பற்றி சவால்விட்டு அரசியல் செய்தார்

அவருக்கு கொடுக்கபட்ட பாரத ரத்னா, கலைஞருக்கு ஏன் மறுக்கபடுகின்றது?

அண்ணா என்பவர் பிரிவினை பேசினார் என வைத்துகொண்டால் கூட சாகும் வரை அண்ணா பெயரில் கட்சி நடத்திய ராமசந்திரனுக்கு எப்படி பாரத ரத்னா கொடுத்தார்கள்

கலைஞர் தேசியவாதி அல்ல, ஆனால் தேசிய தலமைகளை நிர்ணயித்தவர்

எத்தனையோ குடியரசு தலைவர்களை நிர்ணயித்தார், எத்தனையோ பிரதமர்கள் குறித்து முடிவெடுத்தார்

தேசிய அரசியலும் அவரும் இணைந்து ஓடினார், மறுக்க முடியாது

ஈழவிவகாரத்தில் அகில இந்திய தலைவர்களை அழைத்து இந்திய தேசியம் ஈழமக்கள் பின்னால் இருகின்றது என்பதைத்தான் காட்ட முயன்றாரே தவிர பிரிவினை விரும்பும் தமிழகம் அல்ல என குறிப்பால் உணர்த்தினார்

பாவி பிரபாகரன் சபாரத்தினத்தை கொல்ல அந்த டெசோ உடைந்தது

மாநில சுயாட்சி பற்றி கலைஞர் சொன்னாரே அன்றி, எங்காவது இந்திய தேசியம் வேண்டாம் என பேசினாரா?

தேசிய நகர்வுகளில் ராமசந்திரன், ஜெயாவினை விட கலைஞர் மிக சிறந்த தந்திரி

சொல்வதாக இருந்தால் இப்படி சொல்லுங்கள்

“ராமசந்திரன் டெல்லி அடிமை அதனால் பாரத ரத்னா உடனே கொடுத்தோம், அதுவும் அம்பேத்கருக்கு முன்பாகவே கொடுத்தோம்

தமிழகத்தில் காங்கிரசை கலைஞர் விரட்டினார், ராமசந்திரனே பின்பு காக்க முயன்றார் அதனால் கொடுத்தோம். அப்படி டெல்லிக்கு விசுவாசமானவர் ராமசந்திரன்

கலைஞர் அப்படி அல்ல, அடிக்க வேண்டிய இடங்களில் டெல்லியினை அடித்தார். நாடு முழுக்க மாநிய சுயாட்சி பற்றி பேசி தலைவர்களை திரட்டினார்

அதனால் எங்களுக்கு பிடிக்காது, கலைஞருக்கு பாரத ரத்னா கிடைக்காது” என பகிரங்கமாக சொல்லுங்கள்

ராமசந்திரனுக்கே கொடுக்கபட்ட பின் அந்த பாரத ரத்னா கலைஞருக்கு கொடுக்கபடாமல் இருப்பதுதான் அவருக்கு மரியாதை

தயவு செய்து அதை கொடுத்து அவர் கவுரவத்தை கெடுத்துவிடாதீர்கள்

அண்ணா போலவே அவர் பாரத ரத்னா வாங்காமலே தூங்கட்டும்

அந்த அடிமைகள் சிறப்பு விருதினை அப்பக்கம் இருக்கும் இருவருமே சுமக்கட்டும்