TVS சேர்மன் வேணு சீனிவாசன் முன் ஜாமீன் கோரியுள்ளது இன்று பலத்த அதிர்ச்சி

Image may contain: 1 person, sitting and suit

ஸ்ரீரங்கம் கோவில் சிலை கடத்தல் வழக்கில் TVS சேர்மன் வேணு சீனிவாசன் முன் ஜாமீன் கோரியுள்ளதுதான் இன்று பலத்த அதிர்ச்சி

காரணம் டாடா கனரக தொழிலில் தன் சாம்ராஜ்யத்தை அமைக்க தொடங்கிய காலங்களிலே திறுக்குறுங்குடி வேங்கட அய்யாங்கார் குடும்பமும் தொடங்கியது

பெரும் கம்பெனியாக அது வளர்ந்தது, அன்றே நூற்றுகணக்கான பேருந்துகள் அவர்களிடம் போக்குவரத்திற்காக ஏராமான பஸ்கள் இருந்தன, தமிழகத்தில் பேருந்துகள் அரசுடமை ஆகும் வரை அவர்கள் சாம்ராஜ்யம் இருந்தது

இன்றும் முண்ணணியில் இருக்கின்றார்கள், பல்லாயிரம் கோடி புரளும் நிறுவணம் அது

அதாவது தொழில் விட்டுவிடலாம்

ஆனால் திறுக்குறுங்குடி கோவில் முதல் ஏகபட்ட கோவில்கள வரை நாங்களே நற்பணி செய்வோம் என முன்னணியில் இருந்தார்கள் அல்லவா? அதுதான் இடிக்கின்றது

தொழிலதிபர் உலகில் முன்னணியில் இருக்கும் ஒரு பிராமண குடும்பம் , ஏராளமான கோவில்களுக்கு திருப்பணி செய்ய முன் நிற்கும் குழுமம், சிலை கடத்தல் வழக்கில் முன் ஜாமீன் கோரி இருப்பது சாதாரண விஷயம் அல்ல‌

7000 சிலை காணாமல் போனதும், சிலைகளுக்கு தங்க மோசடி நடப்பதும் அறநிலையதுறை செல்லரித்து கிடப்பதை காட்டுகின்றது

டிவிஎஸ் சிக்கி இருப்பது யாரை நம்புவது என தெரியாத நிலைக்கு தள்ளுகின்றது

இந்த சிலைகடத்தல் விவகாரங்களை கவனியுங்கள்

பகுத்தறிவாளர்கள் எல்லாம் மகா அமைதி, பிராமண கூட்டமும் அமைதி, இந்த இந்துமதத்தை காக்க வந்த அவதாரங்களும் அமைதி

எல்லாம் கூட்டு களவாணிகள்

ஒரு பயலும் யோக்கியன் இல்லை, இனி ஆலயங்களை அந்தந்த ஊர் மக்கள் நிரம்பிய கமிட்டியிடம் கொடுத்தாலன்றி பாதுகாக்க வழியில்லை


டிவிஎஸ் சீனிவாசன் முன் ஜாமீன் கோரும் நேரம், இந்த ஆடிட்டர் குருமூர்த்தி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளாராம்

இது என்ன பிராமண குலத்திற்கு வந்த சோதனை?

கலைஞர் காலமான பின்புதான் அதிகமான சோதனை வருகின்றதோ?

நள்ளிரவில் இனி பிராமணாள் கலைஞர் சமாதியில் மர்ம யாகம் நடத்தும் காட்சியும் நடந்தாலும் நடக்கலாம்.