கேரளா கடும் வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறது
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு கனத்துவிட்டது, மறுபடியும் கொட்டி தீர்க்க ஆரம்பித்தாயிற்று
இதில் கன்னட அணைகள் மறுபடியும் திறக்கபடுகின்றன, கேரளாவும் கடும் வெள்ளத்தில் சிக்கி கொண்டது
இதில் கேரளாவின் சில பொய்முகங்கள் வெளிவருகின்றன
அதாவது ஆசியாவின் பெரிய அணைகளில் ஒன்று என அவர்கள் கட்டிய இடுக்கி அணை இப்பொழுது நிரம்பி இருக்கின்றது, சில வருடங்களுக்கு பின் நிரம்பி இருகின்றது, அது திறக்கபட்டு வெள்ளம் வெளியேறி கேரளா தத்தளிக்கின்றது
இந்த அணைக்கு நீர்வரத்து இல்லை என்பதால்தான் முல்லை பெரியாறு அணையினை இடிக்க மிக தீவிரமாக நின்றது கேரளம்
இப்பொழுது தெரியும் விஷயங்கள் இரண்டு
முதலாவது முல்லை பெரியாறு அணை மகா வலுவானது இந்த கொடும் மழைக்கும் வெள்ளத்திற்குமே தாக்குபிடிக்கும் அணை இனி அசையவே அசையாது
இரண்டாவது நல்ல மழை இருந்தால் தவிர இடுக்கி அணை நிரம்பாது, அவ்வளவு பேராசைபட்டு மிகபெரிதாக கட்டி இருக்கின்றார்கள், அந்த பேராசையில் முல்லை பெரியாரில் வம்புக்கு வருகின்றார்கள்