ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்ய முடியாது : மத்திய அரசு

ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்ய முடியாது என இந்திய அரசு உச்சநீதிமன்றத்தில் திட்டவட்டமாக அறிவித்துள்ளதுடன் மேலும் கூடுதலான ஆவனங்களை சமர்பித்துள்ளது.

எவனாவது ஒரு பயல் தமிழர் விரோத மோடி ஒழிக என்றோ, தமிழின துரோகி பழனிச்சாமி ஒழிக என்றோ சொல்வானா என்றால் இல்லை

சொல்லமாட்டான்

இந்த மதிமுக, பாமக , விடுதலை சிறுத்தை இன்னபிற சில்லறை கோஷ்டிகள் எல்லாம் எப்பொழுது ஈழ ஆதரவு என கிளம்பியது என நினைக்கின்றீர்கள்??

அதுவரை புலிகளை ஆதரித்த திமுக, ஏன் சொந்த ராணுவம் அந்நியநாட்டில் போரிடும் பொழுது அதை எதிர்த்து தேசதுரோகுற்றசாட்டில் சிக்கிய திமுக‌, 
ராஜிவ் கொலையினை தொடர்ந்து திமுக பெரும் சிக்கலில் சிக்கியது, பெரும் திமுக புள்ளிகள் எல்லாம் முடக்கபட்டார்கள்

பெரும் வெற்றிடம் நிலவியது, அந்த வெற்றிடத்தில் பதவியில் இருந்த சசிகலா கும்பல் தங்க வேட்டை, மங்கோலியர் போல வேகமான நிலம் சுருட்டல் என ஆடிகொண்டிருந்தது

திமுக முடங்கிய இந்த நேரத்தில் அரசு அப்படி இருக்க, இந்த மதிமுக பாமக இன்னபிற கோஷ்டிகள் எல்லாம் ஈழபுலிகளுக்கு நாங்கள் இருக்கின்றோம் என கொடிபிடிக்க தொடங்கின‌

அப்படித்தான் இவர்களின் ஈழபாசம் வந்தது, அதாவது திமுக முடக்கபட்ட நிலையில் நாங்களே ஈழ விவகாரத்திற்கு பொறுப்பு என்பது போல சீன் போட்டார்கள்

ஆனால் உளவுதுறை கண்காணிப்பிலும் இருந்தார்கள்

இவர்களால் புலிகளுக்கோ ஈழமக்களுக்கோ ஏதும் உதவி கிடைத்ததா என்றால் சத்தமே இல்லை,ஆனாலும் ஈழ‌ களத்தில் இருந்தார்கள்

இவர்களோடு 2009ல் சைமன், திருமுருகன் போன்ற திடீர் போராளிகளும் குதித்தார்கள்

இவர்களின் அஜென்டா என்னவென்றால் யாரோ லாபம் பெறும் விதமாக திமுகவிற்கு குடைச்சல் கொடுத்துகொண்டே இருப்பது

எதெல்லாம் திமுகவின் எல்லைக்கு அப்பாற்பட்டதோ அது எல்லாம் கலைஞர் துரோகம் என ஒப்பாரிவைத்து அவர்மேல் பழிபோடுவது

இப்படித்தான் இவர்கள் அரசியல் இருந்தது

இன்றோ இவர்களை இயக்கியவர்களுமில்லை, இவர்கள் எதிர்த்த கலைஞருமில்லை

அதனால் மத்திய அரசு 7 பேரையும் வெளிவிட முடியாது என சொன்னபின் எல்லாம் மகா அமைதி, வாயே திறக்கமாட்டார்கள்

மோடி ஒழிக, எடப்பாடி ஒழிக என எவனாவது கிளம்புவானா என்றால் மாட்டான்

கலைஞர் இல்லாததால் கனத்த அமைதி

அப்படியே அவர் இல்லாத அரசியலில் இருந்து இவர்கள் வெளியேறி சென்றுவிட்டால் இன்னும் மகிழ்ச்சி, தமிழகம் நன்றாக அமைதியாக இருக்கும்