மெரீனாவில் புதைத்த எந்தத் தலைவரின் வாரிசும் ஆண்டதில்லை : விபரீத கற்பனையில் உருவாகும் சிந்தனைகள்
இதெல்லாம் இந்த தும்பிகளின் விபரீத கற்பனையில் உருவாகும் சிந்தனைகள்
இவர்கள் இருவருக்கும் யாரும் அப்படி கேட்கவில்லை, இருவருமே தேசியவாதிகள், அதிலும் தேவர் தன் உடல் இந்து தர்மபடி எரிக்க வேண்டும் என்ற கடுமையான கட்டுப்பாடு உடையவர்
ஒருவேளை இந்த தும்பிகள் கற்பனை படி நடந்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று பார்த்தால் பகீரென்கின்றது
தேவர் குருபூஜை அன்று 200 கொலையும், காமராஜர் பிறந்தநாள் இறந்த நாள் வகையில் 300 கொலையும் நடந்திருக்கும்
அது தொடர்பில் தமிழமெங்கும் கலவரம் வெடித்து அதில் 500 பேர் செத்திருப்பார்கள்
ஊர்பட்ட ரவுடிகள் எல்லாம் இருவர் சமாதி பக்கமும் மாறி மாறி மாலையோடு வந்திருப்பர்
மெரினா, பாகிஸ்தான் பார்டரில் இருப்ப்பது போல பெரும் ராணுவ கட்டுபாட்டில் இருக்கும், ஒரு காக்கைகூட அப்பக்கம் செல்ல முடியாது
பீரங்கி,டாங்கி விமானபடையுடன் ராணுவம் சமாதிகளை சுற்றி காவலிருக்கும்
இந்த தும்பிகளின் எண்ணமும் செயலும் ஏன் கற்பனையும் கூட பலபேர் வெட்டிகொண்டு சாகவேண்டும் என்றே இருக்கின்றது???
“மெரீனாவில் புதைத்த எந்தத் தலைவரின் வாரிசும் ஆண்டதில்லை, அவர்களுக்கு பின் கட்சி உடைந்திருக்கின்றது” என சில சொல்லி திரிகின்றன
சுய சந்தோஷம் என்பது இதுதான்
அட பதர்களா?
மெரீனாவில் அண்ணாவினை புதைத்த பின்னும் அவரின் கட்சிகள்தான் 50 வருடமாய் ஆள்கின்றன
ராமசந்திரனுக்கு பின் அக்கட்சியே ஆட்சிக்கு வந்தது
ஜெயாவிற்கு பின் பழனிச்சாமியே அதிமுக முதல்வராக
பின் என்ன விஷயம் கண்டீர்கள்??? இதில் கலைஞரை தவிர மூவருக்கும் நேரடி வாரிசுகளே இல்லை பின் எப்படி ஆளும்?
நன்றாக கவனியுங்கள்
அவர்கள் புதைக்கபட்டாலும் கட்சி நிற்கின்றது, உடைந்தாலும் மறுபடி எழும்பி ஆட்சியினை பிடிக்கின்றது
அண்ணாவிற்கு பின் திமுக இருந்ததது, அப்படியே கலைஞருக்கு பின்னாலும் இருக்கும்.
வேண்டுமானால் இப்படி சொல்லுங்கள்
மெரினாவில் ஒருகட்சி தலைவரை புதைத்துவிட்டால் அடுத்த பல்லாண்டுகளுக்கு அக்கட்சிதான் ஆளும்
ஏனென்றால் அதுதான் வரலாற்றில் நடந்திருக்கின்றது, இன்னமும் நடக்கும்