பாகிஸ்தானில் வடக்கே பலுசிஸ்தான்

பாகிஸ்தானில் வடக்கே பலுசிஸ்தான் பகுதி உண்டு, அம்மக்களுக்கு பாகிஸ்தானை பிடிக்காது. பிரிவினையின் பொழுதே இந்தியாவோடு இணையவே விரும்பினார்கள்

எல்லை காந்தி என அழைக்கபட்டு, பிரிவினையின் பொழுது எங்களை அனாதை ஆக்காதீர்கள் இந்தியர்களே என கண்ணீர் விட்ட அந்த கான் அப்துல் கபார்கான் அங்கு இருந்தவர், இன்றும் அப்பகுதி பாகிஸ்தானுக்கு எதிராக போராடிகொண்டே இருக்கின்றது

அந்த பகுதிக்கு இந்திய ஆதரவும் உண்டு

இப்பொழுது அங்கு பாகிஸ்தான் அரசு சில அடக்குமுறைகளை செய்ய இந்தியா கவலை கொண்டு கண்டிக்கின்றது, உலக செய்தியாக்குகின்றது

ஏன் கண்டிக்கின்றது என்றால் இதுதான் அரசியல்

இப்படி பலுசிஸ்தானை இழுக்க இழுத்து தலைவலி கொடுத்தால்தான் காஷ்மீரில் பாகிஸ்தானின் சத்தம் குறையும்.

ராஜதந்திரம் தான் சந்தேகமில்லை, மோடி அரசு அதை இப்பொழுது அட்டகாசமாக செய்கின்றது, வாழ்த்துக்கள்