கலைஞர் சமாதியில் திமுகவில் உட்கட்சி சலசலப்புகள்
திமுகவில் உட்கட்சி சலசலப்புகள் கலைஞர் சமாதியில் இருந்து தொடங்கிவிடுமோ என சொல்லபட கூடிய சில விஷயங்கள் நடந்திருக்கின்றன, இது பல பத்திரிகையாளர் முன்னால் நடந்தாலும் இந்த திமுக தலைமைக்கும் இந்த உருக்கமான நேரத்திற்கும் அஞ்சி பல பத்திரிகையாளர்கள் சொல்லவே இல்லை
உண்மையில் அவர்கள் பத்திரிகையாளர்களே அல்ல, பிழைப்புவாதிகள்
என்ன நடந்திருக்கின்றது?
கலைஞர் சமாதிக்கு எல்லோரும் சென்றுகொண்டிருப்பது யாவரும் அறிந்தது, வைரமுத்து முதல் சகலரும் சென்று வணங்கி நிற்கின்றார்கள், செல்லாத பிரபலங்கள் இல்லை
அப்படி திமுக மகளிரணியினை சேர்ந்த சல்மா என்பவரும் சென்றிருக்கின்றார், வணங்கி இருக்கின்றார்
அங்கு இருந்த இரு திமுக பிரபலங்கள் அவரை தாறுமாறாக திட்டி இருக்கின்றன, அவர் அழுதுகொண்டு அவமானத்தோடு வெளியேறியதை பலர் கண்டிருக்கின்றார்கள்
திட்டியது யாரென்றால் துறைமுகம் தொகுதியினை சேர்ந்த கஜா என்பவரும், எம்.எல்.ஏ செல்வம் என்பவரும், இவர்கள் ஸ்டாலினுக்கு சோப்பு போட்டு செருப்பு கழுவும் கோஷ்டிகள்
ஏன் அப்படி என்றால் கஜா என்பவர் துறைமுகம் தொகுதியில் கலைஞர் நின்றபோழுது அவரை தோற்கடிக்க பாடுபட்ட எதிர்கட்சிக்காரர், இந்த செல்வம் என்பவர் முன்னாள் அதிமுககாரர்
ஆக எங்கிருந்தோ வந்த திடீர் திமுகவினர், கலைஞரால் அரசியலுக்கு கொண்டுவரபட்ட சல்மாவினை விரட்டி இருக்கின்றனர்
ஏன் விரட்டியிருக்கின்றனர் என்றால் சல்மா கனிமொழி அணி என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை
இது முக ஸ்டாலின் கவனத்திற்கு சென்றது என்கின்றார்கள், சிலர் சென்றும் அவர் கண்டுகொள்ளவில்லை என்கின்றார்கள், எது நடந்திருந்தாலும் ஸ்டாலினுக்கே வெளிச்சம்
கலைஞர் என்றுமே திமுகவில் எல்லா தரப்பும் இருக்க வேண்டும் என ஆசைபட்டவர், அதில் எழுத்தாளர்களுக்கும் கவிஞர்களுக்கும் அவர் கொடுத்த இடமே தனி
அப்படி அவரால் நேரடியாக திமுகவிற்கு கொண்டு வரபட்டவர்தான் சல்மா
அவரை திமுகவின் முன்னாள் துரோகிகள் , ஏதோ இந்நாள் திமுக காவலர்கள் போல நின்று வார்த்தையால் அவமானபடுத்தி விரட்டியிருப்பது நிச்சயம் சரி அல்ல
இதை திமுக தலைவரும் ரசித்துகொண்டிருக்கின்றார் என்பதுதான் ஆச்சரியம்
ஆக கனிமொழி கோஷ்டி என்பதற்காக கலைஞரின் கரத்தால் அரசியலுக்கு கொண்டுவரபட்ட சல்மாவினை ஸ்டாலின் கோஷ்டி கலைஞர் சமாதியிலே விரட்ட தொடங்கிவிட்டது
இனி தாமரை போல, உதய சூரியனும் …..ல் தான் உதிக்கும்.