வருண பகவானே வருந்தகூடிய அளவிற்கு கேரள வெள்ளம்
கேரள வெள்ளம் வருண பகவானே வருந்தகூடிய அளவிற்கு சென்றாயிற்று அணைகள் எல்லாம் கலைஞரின் கோபாலபுரம் வீடு போல திறந்தே வைக்கபட்டாயிற்று, மிக பெரும் வெள்ளம்
முதல் முறையாக கேரளம் முல்லைபெரியாரில் 152 அடிவரை தேக்குங்கள் என சொல்கின்றது, மிக பெரும் வினோதம் இது
முன்பெல்லாம் அந்த அளவு நீர் தேக்கபட்டது, இந்த இடுக்கி அணைக்கு நீர் வேண்டும் என்பதற்காக குறைக்க சொன்னார்கள், சொல்லி பார்த்தார்கள் பின்பு சொல்ல வேண்டியவர்கள் மூலம் சொன்னார்கள்
அதாவது டெல்லி வழியாக ராமசந்திரனுக்கு நெருக்கடி கொடுத்தார்கள், தான் பிறந்ததே டெல்லிக்கு மண்டியிட என்பதை 1972ல் உணர்ந்த ராமசந்திரன், தன் ஆட்சிகாலத்தில் அதாவது 1980களில் அணை நீர்மட்டத்தை 132 அடிக்கு குறைத்தார்
இதனால் தமிழகம் பாதிப்புக்குள்ளானது, அதற்கெல்லாம் அஞ்சுபவரா ராமசந்திரன்? “ஏன் இப்படி அநியாயமாக குறைத்தீர்கள்? இதனால் எவ்வளவு பாசனபரப்பு பாதிக்கபடும் தெரியுமா?” என கேட்டால் ராமசந்திரன் இப்படி பதில் சொன்னார்.
“கலைஞர் ஊழல்வாதி, கலைஞர் வீராணம் ஊழல் செய்தவர், கலைஞரை நான் சும்மா விடமாட்டேன், இது ஊழலற்ற அரசு
ஏதாவது புரிகின்றதா? இதுதான் ராமசந்திரன் அரசியல்
பின் ஜெயலலிதா அதை 142 அடியாக மீட்டார், இப்பொழுது கேரளமே இல்லை இல்லை முழு கொள்ளளவும் நிரப்புங்கள் என சொல்லிவிட்டது போல் தெரிகின்றது
மனிதனால் தீர்க்கமுடியா சிக்கல்களை ஆண்டவன் தீர்த்து வைப்பான் என்பது இதுதான்
இப்பொழுது கேரள மக்களின் துயரத்தில் நாமும் பங்குபெற்று நிற்கின்றோம்
தமிழக அரசும், கட்சிகளும் இன்னபிற அமைப்புகளும் அவர்கள் துயர் துடைக்க உதவிகொண்டிருக்கின்றன, நம் சகோதரர்களின் இக்கட்டான நேரத்தில் நாம் தான் உதவ வேண்டும்
அவர்களும் ஒன்று சிந்திக்கலாம்
பாருங்கள், எவ்வளவு வெள்ளம், கேரளாவினை திணறடிக்கின்றது, இதன் முழு காரணம் என்ன?
பல இடங்களில் தமிழகத்திற்கு செல்லும் வாய்ப்பு இருந்தும் அவர்கள் முழு தண்ணீரையும் கேரளாவிற்கே திருப்பினர், ஒரு சொட்டு கூட தமிழகம் வர அவர்கள் விரும்பவில்லை
மேற்கு நோக்கி பாயும் ஆறுகளில் சிலவற்றை கிழக்கு நோக்கி தமிழகத்தில் திருப்பி இருந்தால் இந்த பெரு வெள்ளம் அங்கு வந்திருக்காது, இங்கும் ஆறுகள் பெருகி ஓடி அவர்களின் பெரும் சிக்கல் குறைந்திருக்கும்
இப்பொழுது நிச்சயம் கேரளம் அதை நினைத்து பார்க்கும்
இனியாவது மேற்கு நோக்கி பாயும் ஆறுகளில் சிலவற்றை இங்கே திருப்பி விடட்டும், அவர்களுக்கு அரிசி முதல் காய்கறி வரை இங்கிருந்து செல்லும்
கூடவே இம்மாதிரி வெள்ள நேரத்தில் அது பெரும் வடிகாலாகவும் அமையும்
கன்னடம் பெருவெள்ளத்தில் சிக்காமல் இருக்க காவேரி காக்கின்றது, மலையாள மக்களுக்கு அப்படி வாய்ப்பு இல்லை
இனி உருவாக்கி கொள்ளுங்கள் கேரளத்தவரே, இனியாவது யோசியுங்கள்
முதலில் இந்த இக்கட்டிலிருந்து வெளிவாருங்கள், உங்களுக்கு உதவிகரம் நீட்டுகின்றோம்
அதன்பின் இருவரும் சேர்ந்து வெள்ளத்தை சமாளிக்க செய்ய வேண்டியதை சிந்திப்போம்