கார்மேகம் என்ன செய்யும் பாவம்?
கேரள பெருவெள்ளம் எப்படி ஏற்பட்டது என்பது இப்பொழுது தெரிந்தாயிற்று
தோகைவிரித்து இளமயில் ஆடும்பொழுதெல்லாம் மழை வரும் என்பது பொய்யல்ல, முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல
தலைவியின் தலைமுடியின் வடிவான அழகும் ,, அம்முகமும் தோகை விரித்தாடும் மயில் போலவே இருப்பதால் ஏற்பட்ட கடும் மழையே கேரளாவில் அப்படி கொட்டியிருக்கின்றது
கார்மேகம் என்ன செய்யும் பாவம்?, மயில் ஆடினால் மழைகொட்ட வேண்டியது அதன் பொறுப்பு , தலைவியினை கண்டதும் பெரு மழையாக கொட்டிவிட்டது.
காவேரி பொங்கி வரும் ரகசியமும் இதுவேதான்
நல்லோர் ஒருவர் இருந்தாலே மழைகொட்டும் என்பதல்ல, நல்ல மயில் ஒன்றிருந்தாலும் மழை கொட்டோ கொட்டு என கொட்டும் என்பது உலகிற்கே புரிகின்றது