ஆட்டத்தை ஆரம்பிக்கின்றார் அழகிரி
ஆட்டத்தை ஆரம்பிக்கின்றார் அழகிரி
கலைஞரின் உண்மையான உடன்பிறப்புக்கள் கலைஞரின் அக்கா சன்முகசுந்தரம்பாளும், பெரிய நாயகி அம்மாளும் அவர்கள் இருவருமே இப்போது இல்லை
ஒருவேளை சன்முகசுந்தரம்பாளின் வாரிசுகளான மாறன் குடும்பத்தை பற்றி சொல்வாரோ என்றால்? அந்த தினகரன் பத்திரிகை எரிப்பு எல்லாம் அவர்கள் மறக்கமாட்டார்கள்
நாளை கலைஞர் இல்லாத முதல் பொதுகுழு கூட்டம் நடக்க இருக்கும் பொழுது, கட்சியில் முதல் அஞ்சலி முன்னாள் திமுக தலைவருக்கு செலுத்தபட இருக்கும்பொழுது அழகிரியின் பேச்சு கவனம் பெறுகின்றது
பிரிவு ஒன்றும் திமுகவிற்கு புதிதல்ல
சம்பத், ராமசந்திரன், வைகோ என பல பெரும் பிரிவுகளை பார்த்த கட்சி அது, எந்த சாம்பலில் இருந்தும் அது உயிர்பெறும் வகையில் அதன் அடிதளமிருந்தது கலைஞரும் அப்படி கட்சியினை கொண்டு சென்றார்
அவர் இல்லா நிலையில் பிரிவினை எப்படி திமுக எதிகொள்கின்றது என்பதுதான் இனி தமிழக ஹாட் டாப்பிக்
முன்பு வைகோ பிரிந்தபொழுது அழகிரியினை கொண்டு தென்மாவட்டத்தை திமுக சமபடுத்தியது
இப்பொழுது அழகிரியின் பிரிவினை வைகோவினை கொண்டு நிரப்புவார்களோ என்னமோ?
எனினும் அன்பழகன் போன்ற பெரியவர்கள் கலந்து பேசி அழகிரி எனும் முரட்டு காளைக்கு மூக்கணாங்கயிறு போட்டு கட்சியிலே வைத்துகொள்ளலாம்
தனியே அவரை விடுவது கட்சிக்கு நல்லதல்ல..
அழகிரி உள்ளே வரகூடாது எனும் மிகபெரும் முடிவினை எடுப்பது யாரென்றால் அன்பகழகனாம், அதை திமுகவினர் ஏற்றுகொள்ள வேண்டுமாம்
ஆனால் எந்த பதவிக்கு யார் யாரை நியமிக்க வேண்டும், மத்திய அமைச்சர், மேயர், முதல்வர் போன்ற பெரும் பதவிக்கான விஷயங்களில் அன்பழகனின் முடிவினை
யாராவது எதிர்ப்பார்ககளா என்றால் இல்லை
சுத்தமாக கண்டுகொள்ளமாட்டார்கள்
இவ்வளவிற்கும் அன்பழகன் மேடைகளில் முழங்கியபொழுது அவருக்கு போஸ்டர் ஒட்டியது கலைஞர்
இந்த திமுகவினருக்கு வந்திருக்கும் திடீர் அன்பழகன் பாசம் ஆச்சரியமானது.