ராமசந்திரன் இறக்கும்பொழுது கலைஞர் வந்தாரா?
கலைஞருக்கு அஞ்சலி கூட்டம் திரையுலகினரால் நடத்தபட்டிருகின்றது, நிச்சயம் நடத்தவேண்டிய கூட்டம் அது
கூத்தாடி கூட்டம் என்றிருந்த அந்த கூட்டத்தை கலைஞர்கள் என மதிப்புமிக்க பெயர் கொடுக்க காரணமாயிருந்தவரே கலைஞர்
திரைதுறை அவரால் நிச்சயம் கவுரவம் பெற்றது, அவரும் அந்த துறைக்கு பல உதவிகளை செய்தார்
திரை துறையினருக்கு கொஞ்சமேனும் நன்றி இருப்பது வாழ்த்துகுரியது, அஞ்சலி செய்துவிட்டார்கள்
இதில் ரஜினி வழக்கம் போல் உளறி இருக்கின்றார்
என்ன இருந்தாலும் கலைஞர் இறுதி நிகழ்வில் முதல்வர் வந்திருக்க வேண்டும் என அவர் கொளுத்தி போட பழனிச்சாமி தரப்பு சூடாகின்றது
அவர்களிடமா பதில் இல்லை, நிறைய இருக்கின்றது
ராமசந்திரன் இறக்கும்பொழுது கலைஞர் வந்தாரா?
ஜெயாவின் இறுதிசடங்கில் கடைசிவரை இருந்த திமுகவினர் யார் என கேட்டு திணறடித்துவிடுவார்கள்?
அவர்களின் தற்போதைய லவுடு ஸ்பீக்கர் ஜெயக்குமார் விரைவில் இப்படி சீறுவதை கேட்கலாம்
அப்படியே தினகரனும் சிறையில் இருக்கும் சின்னம்மாவினை திமுகவில் யாரும் சந்தித்தார்களா? என கேட்டு வைக்கவும் வாய்ப்பு அதிகம்