வாரிசு சண்டை என்பது தமிழகத்தில் புதிதல்ல
அரச குடும்பத்தில் வாரிசு சண்டை என்பது தமிழகத்தில் புதிதல்ல, அது அக்காலமுதல் இருந்தது
சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோ எனும் சேரநாட்டு இளவரசனே சிம்மாசனம் கிடைக்கா சோகத்தில் துறவியானான் என்கின்றது வரலாறு
பாண்டியர்களும், சோழர்களும் இதை வேறுமாதிரி கையாண்டிருக்கின்றார்கள்
பாண்டியர் வம்சத்தில் மூத்தவன் மதுரையில் இருந்தால் இளைவனை வஞ்சி, கொற்கை என அனுப்பி வைத்து சிக்கலை தீர்த்திருக்கின்றார்கள்
சோழ வம்சத்தில் மூத்தவன் தஞ்சையில் இருந்தால் இளையவனை உறையூர் பக்கம் அனுப்பி சிக்கலை தீர்த்திருக்கின்றார்கள்
பல்லவர்கள் இதில் விஷேசம், காஞ்சியில் அதிகார சண்டை வந்தபொழுது மூத்தவனை காஞ்சியில் வைத்துவிட்டு இளையவனை கப்பல் ஏற்றி கிழக்கே அனுப்பி இருக்கின்றார்கள்
அப்படி சென்ற பல்லவன் ஒருவன் காஞ்சி கோவிலுக்கு போட்டியாக கம்போடியாவில் கட்டியதே அங்கோர்வாட் கோவில்
இப்படியாக அன்றே தமிழகம் அரச குடும்ப வாரிசு சண்டைகளை நுட்பமாக தீர்த்த கதை உண்டு
எனினும் சகோதர சண்டையால் தமிழகம் அழிந்த வரலாறும் உண்டு
அதாவது மதுரை மன்னர் குலசேகர பாண்டியனுக்கு முதல் மனைவி பட்டத்துராணி மூலம் பிறந்தவன் சுந்தர பாண்டியன் , சின்ன அரண்மனைக்கு பிறந்தவன் வீரபாண்டியன்
இவர்களிடையே யார் அடுத்த அரசன் என்ற சண்டையில் குலசேகரபாண்டியனை போட்டு தள்ளிவிட்டு மன்னர் ஆனான் சுந்தர பாண்டியன்
விடுவாரா வீரபாண்டியர்? அவரும் படை திரட்டி போராடினார், முடிவில் சுந்தரபாண்டியன் தோற்றார், உயிர் தப்பி ஓடினார்
ஓடியவர் எங்கே ஒடினார், அலாவுதின் கில்ஜியின் வெறிபிடித்த தளபதி மாலிக்காபூரிடம் சென்று மதுரைக்கு வா, அதை பிடித்து கொள்ளை அடி, அரசை மட்டும் எனக்கே கொடுத்துவிடு என கெஞ்சினார்
அப்படியே வந்து சூறை ஆடினான் மாலிக்காபூர், அவனின் வெறிதனத்தை கண்ட சுந்தரபாண்டியனே பெரும் செல்வத்தோடு தப்பினான்
திருச்சி, மதுரை, சிதம்பரம், ராமேஸ்வரம் என எல்லா ஆலயங்களையும் துவம்சம் செய்துவிட்டு பெரும் செல்வத்துடன் டெல்லி திரும்பினான் மாலிக்காபூர்
செல்லுமுன் மதுரையினை கொளுத்திவிட்டு சென்றான், ஆம் வீரபாண்டியன் கிடைக்கவில்லையாம்
மதுரை அந்த சகோதர சண்டையால் இரண்டாம் முறை எரிந்தது
பின் நாயக்க மன்னர்கள் வந்து மதுரையில் அமர்ந்து மறுபடியும் மாலிக்காபூர் வராத வண்ணம் வலுவான அரசை அமைத்தனர்
இப்படி எல்லாம் சகோதர சண்டையினை தீர்த்து வழிகாட்டியதும் தமிழகம்
சகோதர சண்டையால் டெல்லி வரை சென்று அந்நியனை அழைத்து வந்து சொந்த மண்ணை எரித்து, சொந்த அரசை சரித்த வரலாறும் கண்டது தமிழகம்
ஏதோ பழம் நினைவுகள் எல்லாம் வந்தன
இன்று அங்கு என்ன நடக்கும் என தெரியாது
ஆனால் “இன்றைய செய்தி நாளைய வரலாறு” என சொல்லிகொண்டே இருப்பது முரசொலி, 75 ஆண்டுகளாக சொல்கின்றது
அதனால் இன்றைய செய்திகள் முக்கியத்துவம் பெறுகின்றன