உலகில் விண்வெளி ஆதிக்கத்தில் நம்நாடு 4ம் இடம்
அது சோவியத் ரஷ்யா விண்வெளிக்கு ராக்கெட்டுகளை விட்டு பின் குரங்கையும் நாயினையும் அதன் பின் மனிதனையும் விண்வெளிக்கு அனுப்பி அசத்தியது
இதை பார்த்த கென்னடி 1962ல் சொன்னார், விரைவில் ஒரு அமெரிக்கன் நிலவில் கால் வைப்பான் என சூளுரைத்தார்
அது அன்று சாத்தியம் என யாரும் கருதவில்லை, அன்றைய தொழில்நுட்பத்தில் அது சாத்தியமுமில்லை
ஆனால் அடுத்த 7 ஆண்டுகளில் அச்சாதனையினை அமெரிக்கா செய்தது, முதன் முதலில் அப்படி உற்சாக குரல் எழுப்பியவர் கென்னடி
நேற்று மோடி 2022ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதனை இந்தியா அனுப்பும் என உற்சாகமாய் சொன்னது அந்த கென்னடியினை நினைவுபடுத்திற்று
உலகில் விண்வெளி ஆதிக்கத்தில் நம்நாடு 4ம் இடத்தில் இருப்பது மிகபெரும் விஷயம், அதை தக்க வைக்க விண்வெளிக்கு மனிதனை அனுப்பியே தீரவேண்டும்
இதுவரை நமது ராக்கேஷ் சர்மா ரஷ்ய விண்கலத்திலும் கல்பானா சாவ்லா போன்றோர் அமெரிக்க விண்கலத்திலுமே விண்வெளிக்கு சென்றிருக்கின்றனர்
இந்தியாவின் சொந்த விண்கலத்தில் இந்தியர் விண்வெளிக்கு செல்லும் கனவு நிறைவேற வேண்டும், அதை உற்சாகமாக சொன்ன மோடிக்கு வாழ்த்துக்கள்
விண்வெளி ஆதிக்கம் என்பது சும்மா பணத்தை வெட்டிக்கு செலவழிக்கும் விஷயம் அல்ல, நாட்டின் பாதுகாப்பு முதல் தகவல் தொடர்பு வரை விண்வெளியிலே நிர்ணயிக்கபடுகின்றது
முதலில் இத்திட்டத்தில் மாபெரும் வெற்றிபெறுவோம், அதன் பின் மறக்காமல் இந்த தமிழக அரசியல்வாதிகளை ஏற்றி விண்வெளிக்கு கொண்டு விட்டுவிட வேண்டும்
அதற்காகவாவது விரைவாக இத்திட்டம் நிறைவேற்றபடும்