வாஜ்பாய்க்கும் ஈழவிவகாரங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு

வாஜ்பாய்க்கு உடல்நிலை மிக கவலைக்கிடம் எந்த செய்தி மிகுந்த சோகத்தை கொடுத்திருக்கின்றது

93 வயதில் இருக்கும் அவர் இன்றைய தேதியில் இந்தியாவின் மிக மூத்த தலைவர், பெரும் நெடிய வரலாறு அவருக்கு உண்டு

தமிழகத்தை புரிந்துகொண்ட மிகசில வடக்கத்திய தலைவர்களில் அவரும் ஒருவர்

பாஜக கோஷ்டியில் இருந்த நல்லவர்களில் கடைசியாக எஞ்சி இருப்பவர் அவர் ஒருவரே

அவர் நலம்பெற்று திரும்ப பிரார்த்திப்போம்


வாஜ்பாய்க்கும் ஈழவிவகாரங்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு

1987 டெசோவில் அவரும் இருந்தார், இந்தியா முழுக்க ஈழமக்களுக்கு ஆதரவான மனநிலையினை திரட்டினார், கலைஞரின் அந்த நுட்பம் வேலைசெய்தது

ஈழமக்களின் பின்னால் மொத்த இந்தியாவும் இருக்கின்றது என்ற பிம்பம் அப்பொழுது இருந்தது

வாஜ்பாயும் சபாரத்னம் போன்ற போராளிகளை சந்திக்க தயங்கவில்லை, ஈழபோராளிகளிலே இந்திரா வாஜ்பாய் என பெரும் தலைவர்களை சந்தித்த ஒரே போராளி சபாரத்னம் ஒருவரே

அவரை பிரபாகரன் கொல்லவும் இனி டெசோ இயங்காது என கலைஞர் அறிவிக்க வாஜ்பாயின் ஈழ ஆதரவு நின்றது, ராஜிவ் கொலையால் அதற்கு வாய்ப்பே இல்லாமல் போனது

விதி அடுத்த சில ஆண்டுகளில் மறுபடியும் வாஜ்பாயினை ஈழ விவகாரத்தில் தள்ளியது, அப்பொழுது அவர் பிரதமர்

அவர் மந்திரிசபையில் இருந்தது வைகோ கட்சி

அப்பொழுதுதான் ஆனைஇறவு போரில் புலிகள் மகத்தான வெற்றி பெற்றனர்

அதாவது யாழ்குடா பகுதியினையும் தென் இலங்கையினையும் இணைப்பது மிக குறுகிய நிலபரப்பு, அது ஒன்றுதான் வழி, இல்லாவிட்டால் கடலை சுற்றித்தான் வரவேண்டும்

அதன் அருகில் யானை இறவு எனும் இடத்தில் இலங்கை ராணுவமுகாம் இருந்தது, 40 ஆயிரம் வீரர்கள் இருந்தார்கள்

யாழ்பாணம் சிங்கள அரசிடம் சிக்கிய பின்னால் இந்த பாதை மகா முக்கியமானது என்பதால் அப்படி காவல் காத்தது சிங்களம்

அந்த முகாமை கடும் யுத்தத்தில் முடக்கினர் புலிகள், அவர்கள் மேல் ஆயிரம் சர்ச்சை இருந்தாலும் ராணுவ ரீதியாக அவர்கள் பெற்ற பெரும் வெற்றி மற்றும் ஒரே வெற்றி அதுதான்

புலிகளின் தளபதி பால்ராஜ் அதை பெற்றுகொடுத்தார்

உண்மையினை சொல்லவேண்டும், அது இஸ்ரேலிய மோசே தயான் பாணியில் நடத்தபட்ட மிக நுட்பமான தாக்குதல்

கடல் வழியே ஆயிரம் புலிகள் வந்து, கடற்கரையில் நிலை எடுத்து சப்ளை ஏதும், உதவி ஏதும் கிடைக்கா நிலையில் துணிந்து தாக்கி சிங்கள படைகளை முடக்குவது என்பது பெரும் ஆச்சரியம்

அந்த வெற்றியில் சிங்களம் ஆடி போனது, யானையிறவு வீழ்ந்தபின் யாழ்பாணத்தை புலிகள் கைபற்றுவது எளிதானது

40 ஆயிரம் ராணுவத்தார் முடக்கம், யாழ்பாணத்தினை எந்நேரமும் புலிகள் கைபற்றலாம் எனும் நிலை

சுருக்கமாக சொன்னால் ஈழம் அடைந்துவிட்ட நிலை, ஆம் அதுதான் உண்மை

சிங்களனை அடித்து விரட்டிவிட்டாகிவிட்டது, 40 ஆயிரம் பேரை பிடித்தாகிவிட்டது இனி என்ன ஈழ அறிவிப்புத்தான்

ஆனால் இந்தியாவிடம் உதவி கோரியது இலங்கை

இந்திய பிரதமராக வாஜ்பாய் துணிந்து சொன்னார், அந்த வீரர்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலோ இல்லை யாழ்பாணத்தை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தாலோ புலிகள் இருக்கமாட்டார்கள், இந்தியா களமிறங்கும்

புலிகள் பணிந்தனர், 40 ஆயிரம் சிங்கள வீரர்கள் விடுவிக்கபட்டனர், அத்தோடு யாழ்பாணத்தை கைபற்றும் திட்டத்தை விட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்பினர்

ஏன் இந்தியா அப்படி செய்தது என்றால் அதுதான் உலக அரசியல், வாஜ்பாய் அதை சரியாக செய்தார்

இன்னொரு கோணத்தில் பார்த்தால் ஈழம் அமைவது வாஜ்பாய் காலத்தில் தடுக்கபட்டது, அந்த புலிகளின் பெரும் வெற்றி வீணாக போனது

( நிச்சயம் மிகபெரிய வெற்றி அது, கிடைக்காத வெற்றி புலிகளின் மிகபெரிய சாதனை

ஆனால் அது வீணாக போனதில் பால்ராஜுக்கும் மனம் பாதித்து படுத்தபடுக்கை ஆகி இறந்தார், இனி எந்த வெற்றிபெற்றாலும் ஈழம் அங்கீகரிக்கபடாது என உணர்ந்த பிரபாகரனும் தீவிர போருக்கெல்லாம் வரவே இல்லை )

உண்மையில் தமிழகம் அப்பொழுதுதான் பொங்கி இருக்க வேண்டும், ராணுவ ரீதியாக வெற்றிபெற்ற புலிகளை ஒடுக்காதே என கிளம்பி இருக்க வேண்டும்

ஆனால் சத்தமில்லை

காரணம் ஜெயா ஊழல் வழக்குகளில் பிசியாக இருந்தார், திமுக ஜெயின் கமிஷன் சர்ச்சைகளில் இருந்தது

முரசொலிமாறன் உட்பட திமுகவினர் அந்த அரசில்தான் இருந்தார்கள்

ராமதாஸ் கும்பலும் வைகோவும் வாஜ்பாய் அரசில் அமைச்சர்களாக இருந்தனர்

அங்கிள் சைமன் பாஞ்சாலங்குறிச்சி போன்ற படங்களை எடுத்துகொண்டிருந்தார், திருமுருகன் காந்தி எல்லாம் எங்கிருந்தான் என்றே தெரியாது

யாரும் ஈழம் அமைவதை வாஜ்பாய் தடுத்ததால் ராஜினாமா செய்கின்றோம் என்றோ ஆதரவினை வாபஸ் வாங்குகின்றோம் என்றோ கிளம்பவே இல்லை..

சுருக்கமாக சொன்னால் ஈழம் அமைவதை தடுத்தவர்களில் வாஜ்பாய் முக்கியமானவர், ஈழவரலாற்றில் மிக முக்கியமான கட்டத்தில் அவரின் முடிவு புலிகளுக்கு பின்னடைவானது

இந்திய பிரதமரை கொன்றுவிட்டு, 1500 இந்திய ராணுவத்தினரை கொன்றுவிட்டு ஒரு இயக்கம் நாடு அடைவதை இந்தியா அனுமதிக்காது என இந்தியனாய் நின்றார் வாஜ்பாய்

ஆனால் பெரும் அதிசயம் என்னவென்றால் வாஜ்பாய் பற்றி எல்லாம் இங்கு மூச்சே விடமாட்டார்கள்

ஈழத்தை அழித்தது காங்கிரஸ், கலைஞர் என சொல்லிகொண்டே இருப்பார்கள்