தமிழகத்தின் வறண்ட பகுதிகளில் பிரதானமானது ராமநாதபுரம் பகுதியும், ராதாபுரம் பகுதியும்
தமிழகத்தின் வறண்ட பகுதிகளில் பிரதானமானது ராமநாதபுரம் பகுதியும், ராதாபுரம் பகுதியும்
ராமநாதபுரம் பகுதிக்காவது வைகை பொங்கினால் வாழ்வு உண்டு, பின்னாளைய பென்னிகுயிக் போன்றவர்களாவது அவர்களுக்கு சில காரியங்களை செய்தனர்
ஆனால் ராதாபுரம் பகுதிக்கு?
ஒன்றுமே இல்லை, பேச்சிபாறை பெருஞ்சாணி அணை நீரை அப்பகுதிக்கு கொண்டுவரும் வெள்ளையனின் திட்டம் உலகப்போரால் நிறுத்தபட்டது, அத்தோடு அவனும் சென்றுவிட்டான்
காமராஜரின் மணிமுத்தாறு திட்டம் ஓரளவு பலன் கொடுத்தாலும் இன்னும் அந்த வறண்ட பகுதியின் பல இடங்கள் ஒரு சொட்டு தண்ணீருக்காக ஏங்கித்தான் நிற்கின்றது
பணக்கார அரபு நாடுகளின் அருகில் இருப்பதால் பெரிய எண்ணெய் வளமில்லா சிரிய லெபனான் போன்ற நாடுகளின் வறுமையும் அழுகையும் வெளிநாடுகளுக்கு கேட்காது
அப்படி தாமிரபரணி திறுக்குறுங்குடி என செழிப்பான பகுதிகளும் இருப்பதால் ராதாபுரம் பகுதி வறட்சி யார் கண்ணுக்கும் தெரியாது
இந்நிலையில்தான் கொடுமுடியாறு அணைபற்றி விவாதிக்கபட்டது
ஒரு சொட்டு தண்ணீருக்கு 1000 அடி தோண்டியும் பலனில்லை என ஏங்கி நிற்கும் பூமி அது
ஏதும் மழை வந்து பயிரிட்டால் கொஞ்சநாளில் நீர் பஞ்சம் வந்து அப்பயிர்கள் வாட, மரண போராட்டத்தில் கண்ட இடமெல்லாம் பொர்வெல் இட்டும் நீர் இன்றி அப்பயிர்கள் சாவதை கண்டு மனம் செத்த மக்கள் இருக்கும் பகுதி அது
விட்டு செல்லவும் முடியாது, வாழவும் முடியாது
அந்த அழுகையும் வேதனையும் அப்பகுதியில் இருந்தாலன்றி தெரியாது
நீரில்லாத ஒரே காரணத்தால் எங்கெல்லாமொ சென்று பிழைக்க வேண்டிய அவலம் அம்மக்களுக்கு இருக்கின்றது
நீர் இல்லா இடத்தில் விவசாயமோ, தொழிற்சாலையோ எப்படி நடக்கும், ஒன்றுமில்லை வெறும் பாலை.
அப்பொழுது பெரும் திட்டமாக அறிவிக்கபட்டது கொடுமுடி அணை
ஆனால் அரசியல் இழுபறி அது இது என அது 30 வருடம் இழுத்தடிக்கபட்டு பின் பெயருக்கு மிக சிறிய அணையாக முடிந்தது
குடிநீருக்கு கூட லாயக்கற்ற அணை அது
ஏன் அப்படி அமைந்தது என்றால் அதுதான் அரசியல், பணக்காரர்களின் எஸ்டேட்டை காக்க ராதாபுரம் மக்களின் நீர் தேவை காவுகொடுக்கபட்டது
ஏராளமான குளங்களை பெருக்கும் என கட்டபட்ட அந்த அணையின் கொள்ளள்வு ஒரு குளத்திற்கு கூட காணாது
நிலத்தடி நீரை பெருக்க கூட அதற்கு சக்தி இல்லை
வெகு சிறிய மழைக்கே அது நிரம்புவதும், உடனே இந்த் அரசியல் இம்சைகள் ஓடி சென்று திறப்பதும், 2 நாட்களிலே அணை வற்றிவிடுவதுமாக காமெடி நடக்கின்றது
பெரும் ஏமாற்றம் அது, மனம் நொந்துவிட்ட விஷயங்கள் அவை
ஏன் இப்படி ஆயிற்று என தோண்டினால் விஷயம் நாகர்கோவில் இடைதேர்தல் வரை நீண்டது
நீருக்காக தவமிருப்பது என்பது அனுபவித்தால் அன்றி புரியாது
சென்னையில் இருந்து கொண்டு வீராணம் நீர், ஆந்திராவின் கிருஷ்ணா நீர் என குடித்துகொண்டிருப்பவனுக்கு அந்த வலி தெரியாது
தான் பொய்த்தாலும் நிலத்தடி நீர்மட்டத்தை காத்து நிற்கும் காவேரி, வைகை கரையில் இருப்பவனுக்கும் அது புரியாது
விவசாயியாக வாழ்வது மிக கடினம், அதுவும் இந்த வறண்ட பகுதி விவசாயி என்பவன் சபிக்கபட்டவன் அவனின் வலியினை சொல்ல வார்த்தைகளே இல்லை
அவன் விவசாயத்தோடு போராடுவானா? இல்லை நீர் தேடி போராடுவானா? அவனுக்கு இரட்டை போராட்டம்
தீர்வு சொல்ல வந்த அரசு நல்ல தீர்வாக சொல்லி இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும்
அந்த மக்கள் புறக்கணிக்கபட்டதில் அரசியலும் இருந்தது
நாகர்கோவில் மட்டுமல்ல, ராதாபுரம் தொகுதியும் அன்று காங்கிரஸின் கோட்டையாகவே இருந்தது
அந்த கோணத்திலும் அம்மக்கள் பழிவாங்கபட்டனர், மிக சத்தியமான உண்மை இது.
அந்த வலியில் எழுதினோம், கத்துபவன் கத்திகொண்டே இருகட்டும்