கேரள பெரு வெள்ளத்தால் இலங்கைக்கு திடீர் அதிர்ஷ்டம்

கேரள பெரு வெள்ளம் இந்தியாவிற்கு கடும் நஷ்டம் ஆனால் இலங்கைக்கோ திடீர் அதிர்ஷ்டம்

ஆம், கொச்சி மூழ்கி கிடப்பதால் அங்கு வரவேண்டிய கப்பல்கள் எல்லா கொழும்புக்கு சென்று கொண்டிருக்கின்றன

தூத்துகுடிக்கு ஏன் வரவில்லை என்ற பகுத்தறிவு கேள்வி எழலாம், இலங்கையினை சுற்றித்தான் வரவேண்டும் வரும் வழியில் கொழும்பு உள்ளதால் அங்கேயே தங்கிவிடுகின்றன‌

குமரி பக்கம் நல்ல துறைமுகம் அமைந்திருந்தால் இச்சிக்கல் வந்திருக்காது, குமரியில் துறைமுகம் அமைந்துவிட கூடாது என்பது இலங்கை அரசின் ஆசை

அதற்கு துணைபோவது சிலர், அவர்களுக்கு ஆசை இந்தியா உருப்பட கூடாது என்பது. இதை பற்றி எல்லாம் நாம் பேசகூடாது

தூத்துகுடிமாவட்டம் குலசேகரன் பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க இன்று ஆய்வு நடைபெறுகின்றது

அது என்னவோ தெரியவில்லை மத்திய அரசின் கடற்கரை நிலைய திட்டங்களை தமிழகத்தில் பல சக்திகள் விரும்புவதில்லை

மத்திய அரசின் நிலையங்கள் வந்தால் பாதுகாப்பு அதிகரிக்கும், அது தங்களுக்கு ஏதோ ஒரு வகையில் இடைஞ்சலாகும் என கருதும் கூட்டம் பல வேலைகளை செய்கின்றது

விரைவில் இந்த குலசேகர பட்டண திட்டத்திற்கும் பெரும் எதிர்ப்பு வெடிக்கலாம்

ஆனால் பச்சை தமிழன் பழனிச்சாமி இரும்பு ஆட்சி நடத்துவதால் திட்டம் நிறைவேற வாய்ப்பு அதிகம்

அப்படி அமையும்பட்சத்தில் அந்த ராக்கெட் ஏவும் மையத்திற்கு அப்துல் கலாம் பெயர் சூட்டபடவேண்டும்.


காவேரி நீர் கடலுக்கு செல்வது வேதனையாக உள்ளது ; இல கணேசன்

கனத்த மழை காலத்தில் வெள்ளம் கடலுக்கு செல்லாமல் எங்கு செல்லும்?

கன்னடனிடம் அணையினை திறக்காதே எல்லோரும் முழ்கி சாவுங்கள் என்றா சொல்ல முடியும்?