கடவுள் வெள்ளத்தை அனுப்பினான் என சொல்லும் ஒரு கோஷ்டி
கேரள மாந்தீரிகம் பொல்லாதது, அதை பொறுக்கா கடவுள் வெள்ளத்தை அனுப்பினான் என சொல்லிகொண்டிருக்கின்றது ஒரு கோஷ்டி
வெள்ளையன் கேரளாவினை பிடித்து ஆளும்பொழுது மாந்திரீகம் என்ன செய்தது? அது போக்கில் வரிகட்டி கொண்டிருந்தது
பெரியார் வைக்கமில் களமிறங்கியபொழுது மாந்தீரிகம் என்ன செய்தது? பெரியாரிடம் தோற்று இருந்தது
கேரள மாந்தீரிகம் அவ்வளவு சக்திவாய்ந்தது என்றால் கேரள முதல்வர்களாக கம்யூனிஸ்டுகள் வந்திருக்க முடியாது
எல்லாம் மூலகடவுளின் விதிபடியே நடக்கும், அதை மாற்ற மாந்திரிகத்தால் முடியாது
அப்படி முடியுமானால் கேரள முதல் மந்திரியும், பாரத பிரதமரும் மந்திரவாதியாகவே இருப்பார்கள், அவ்வளவு ஏன் டிரம்ப் கூட இவர்களை அருகில் வைத்துகொண்டு புட்டீனுக்கு பக்கவாதம் வரவேண்டும், வடகொரிய அதிபருக்கு ஹார்ட் அட்டாக் வரவேண்டும் என சொல்லிகொண்டிருக்கமாட்டாரா?
கேரள மந்திரவாதிகள் ஜெயலலிதாவினை பிரதமராக்கிய கதை எல்லோருக்கும் தெரியும். சசிகலாவினை என்ன நிலைக்கு தள்ளினார்கள் என்பதும் புரியும்
அட அவ்வளவு சக்திவாய்ந்த மாந்திரிகம் இருக்குமென்றால் முல்லை பெரியாறு அணையினை அப்பொழுதே 4 குட்டிசாத்தான்களை அனுப்பி இடித்திருக்கமாட்டார்களா?