சிரியாவில் அமைதி திரும்பி இருப்பது நல்ல விஷயங்கள்

Image may contain: 3 people, people smiling, people standing, outdoor and nature

சிரியாவில் அமைதி திரும்பி இருப்பதும் அதை தொடர்ந்து அகதிகளாக சென்ற மக்கள் திரும்பி வருவதும் நல்ல விஷயங்கள்

போராளி குழுக்கள் ஐஎஸ் இயக்கம் சிரிய அரசு என நடைபெற்ற போரில் லட்சகணக்கான மக்கள் வெளியேறினர்.

அவர்கள் நிலம் வழியாகவும் கடல் வழியாகவும், அகதிகளாக சென்ற காட்சிகள் கலக்கத்தை ஏற்படுத்தின, அதில் இறந்தோரும் ஏராளம் உண்டு

இப்பொழுது ஐஎஸ் இயக்கம் அடக்கபட்டாயிற்று, போராளி குழுக்களும் சத்தமில்ல்லை

ஈராக்கில் முழுவெற்றி பெற்ற அமெரிக்காவால் ரஷ்ய தலையீட்டில் சிரியாவில் வெற்றிபெற முடியவில்லை, அசாத்தின் அரசு அப்படியே இருக்கின்றது

மோடி பழனிச்சாமியினை காத்து நிற்பது போல சிரிய அரசை புட்டீன் காத்துவிட்டார்

எப்படியோ கொடும் யுத்தம் ஒழிந்தது என்பது வரவேற்குரியது

இந்த ஐஎஸ் இயக்கத்திற்கும் அங்கிள் சைமனின் நாம் தமிழருகும் ஒரே ராசி, இரண்டுமே 2009களில் தொடங்கிற்று, 2012 13களில் உச்சம் சென்றது

2016ல் குத்தாட்டம் போட்டது, பின் அப்படியே இறங்கி இரண்டுமே இப்பொழுது அடங்கிவிட்டது

இந்த சிரிய போரில் ஒரு விஷயம் நோக்கலாம், ராஜிவ் பிறந்த நாளன்று அதை யோசிக்கலாம்

ஆம், இதோ சிரியாவில் உள்நாட்டு பிரச்சினை வல்லரசுகள் களமிறங்கின‌

ஏதாவது ஒரு நாடு போராளி குழுக்களை அழைத்து பேசியதா என்றால் இல்லை, எல்லாம் சிரிய அரசுடனே பேசியது

சிரிய மக்கள் அகதிகளாக வரவர உலகநாடுகள் தலையிட்டன‌

ஈழசிக்கலில் இப்படி அகதிகள் இந்தியா வந்தனர், இந்தியா தலையிட்டது, ஒரு கட்டத்தில் சிங்கள அட்டகாசம் எல்லை மீற அமைதிபடையினை அனுப்பியது பின் என்னவெல்லாமோ நடந்தது

இதே சிரிய நிலையினை பாருங்கள், ஒரு போராளி குழு புட்டீனோ டிரம்போ எங்களிடம் பேசவில்லை , நாங்களே ஏக போக சிரிய மக்களின் அத்தாரிட்டி என சொல்லி அடம்பிடித்தால் என்னாகும்

அடத்தோடு நிற்காமல் புட்டீனுக்கு ஒரு குண்டு, டிரம்பிற்கு ஒரு மனித வெடிகுண்டு என அனுப்பினால் என்னாகும்?

சனியனை உலக நாடுகள் சேர்ந்து போட்டு அடித்து கொல்லாதா?

இலங்கையில் புலிகளை இப்படித்தான் ஒழித்தார்கள். சிரிய சிக்கலையும் இலங்கை சிக்கலையும் ஒப்பிட்டால் புலிகளின் இமாலய தவறு புரியும்

சிரிய மக்கள் வாழ்வில் இனியாவது அமைதி நிலைக்க வாழ்த்துவோம்

இலங்கை அரசும் அகதியாய் சென்ற தமிழர்கள் தாயகம் திரும்ப அழைப்பு விடுத்துகொண்டே இருக்கின்றது, அவர்களும் தம் சொந்தநிலம் திரும்பி அமைதியாய் வாழட்டும்

சொந்த பூமிக்கு திரும்புவதை விட பெரும் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏது உண்டு?

சிரியர்கள் அந்த ஆனந்தத்தில் சிரிக்கின்றார்கள், அந்த சிரிப்பு நிலைக்கட்டும்