சித்துவிற்கு ஒரு நீதியா?

Image may contain: 7 people, people smiling, text

பாகிஸ்தான் ராணுவ தளபதியினை கட்டியணைத்த சித்துவிற்கு ஏராளமான கண்டனங்கள், தேசதுரோக வழக்கு பதிவு : செய்தி

இந்த சினிமா நடிகர்கள்தான் கேமரா முன் சண்டையிட்டு விட்டு திரைக்கு பின்னால் கொஞ்சுவார்கள் என்றால் கிரிக்கெட் வீரர்களும் அதற்கு விதிவிலக்கு அல்ல‌

சித்து மீது இந்தியருக்கு மரியாதை வர காரணமே பாகிஸ்தான் அணி என்றால் அவர் காட்டிய வெறியான விளையாட்டு, ஒரு உணர்ச்சி அதில் அப்பொழுது இருந்தது

அப்படிபட்ட சித்து இம்ரான்கானின் பதவி ஏற்புக்கு சென்றுவிட்டு பாகிஸ்தான் ராணுவ தளபதியினை கட்டி பிடித்திருக்கின்றார்

Image may contain: 2 people, people smiling, people sittingஎந்த தளபதி? அனுதினமும் இந்தியாவில் தீவிரவாதிகளை ஊடுருவ செய்யும் அந்த தளபதி அடிக்கடி எல்லையில் அத்துமீறும் தளபதி.

பாகிஸ்தானை உண்மையாக ஆளும் ஆட்சியாளரான அந்த ராணுவ தளபதி

இதனால் சித்துமீது தேசதுரோக வழக்கு பதிவாயிற்று, செய்ய வேண்டிய வேலை இது, அந்நிய நாட்டு ராணுவதளபதியினை இவர் சந்தித்து அன்புகாட்ட என்ன இருக்க்கின்றது??

இந்த இடத்தில் ஒரு விஷயம் உறுத்தும்

பஞ்சாபிய சித்து பாகிஸ்தான் ராணுவ தளபதியினை சந்தித்தால் தேசதுரோகம் என தேசம்பொங்குகின்றது நல்லது

இங்கே தமிழகத்தில் இலங்கையில் இருந்த அந்நிய நாட்டு தீவிரவாதியினை அதாவது தாவுத் இப்ராஹிம் போல இந்நாட்டிற்கு பெரும் துரோகம் இழைத்தவனை, பெரும் குண்டுவெடிப்புகளை செய்தவனை இங்கிருந்து சிலர் ஓடி சென்று பார்த்தனர்

அவனோடு படம் எடுத்து ஊரெல்லாம் ஒட்டினர், அவன் படத்தை பிடித்துகொண்டு கட்சி எல்லாம் நடத்துகின்றனர்

இதெல்லாம் தேசதுரோகத்தில் வராதா? நிச்சயம் வரும்

பிரபாகரன் இந்தியாவில் நிகழ்த்திய குண்டுவெடிப்புகளுக்கும் தாவுத் இப்ராகிம் இங்கு நிகழ்த்திய அழிவுகளுக்கும் என்ன வித்தியாசம்?

தாவுத் இப்ராஹிம் வரிசையில் வருபவர்தான் பாகிஸ்தான் தளபதி

சித்துவிற்கு ஒரு நீதி? தமிழ்நாட்டு ஈழ சித்து விளையாட்டுகாரர்களுக்கு ஒரு நீதியா?

மிக மோசமான தேசவிரோதிகள் ,கொஞ்சமும் தேசபற்று இல்லா தேசவிரோதிகள் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றனர்

அவர்களை எல்லாம் பிடித்து அடைக்காமல் இத்தேசத்தில் சித்துவினை எப்படி கண்டிக்க முடியும்?