மனுஷ் பற்றி சொன்னால் திமுகவினர் எல்லாம் பொங்குகின்றார்கள்

இந்த மனுஷ் பற்றி சொன்னால் இந்த திமுகவினர் எல்லாம் பொங்குகின்றார்கள்

மிகபெரும் தந்திரசாலி என தன்னை நினைத்துகொள்ளும் மனுஷ் எனும் மங்கூசன் இப்பொழுது சிரித்து கொண்டிருக்கலாம்

ஆனால் இந்துக்களின் மனதை புண்படுத்திவிட்டு ஸ்டாலின் முதல்வராகலாம் என யாரும் எண்ணிவிட முடியாது, ஸ்டாலின் கலைஞர் அல்ல, அல்லவே அல்ல அப்படி ஆகவும் முடியாது

இந்த மனுஷுக்காக மல்லுகட்டும் இந்த திமுகவினர் எல்லாம் திமுகவின் வாக்குகளை விரட்டுகின்றார்களே அன்றி வேறல்ல‌

நாம் இந்தியன், நமது பார்வை முழு இந்தியாவாகத்தான் இருக்கும், தமிழகம் என்பது அதிலொரு மாநிலம் திமுக என்பது அதிலொரு கட்சி

இதற்காக முழுக்க திமுக என நாம் குறுகிவிட முடியாது

திமுகவின் எல்லை என்ன, என்பது எல்லோருக்கும் தெரியும்

இந்நாட்டில் தமிழகத்திற்கான அரசியலை அது செய்வதாக சொல்லிகொள்ளமாலே தவிர பெரும் முடிவுகளை அதனால் செய்ய முடியாது

திமுக இந்தியாவிற்கு உதவிய கட்சி என்றோ, அத்தியாவசியாமன கட்சி என்றோ சொல்ல முடியுமா?

இத்தேசத்திற்கு அது செய்ததாக ஒன்றையும் சொல்ல முடியாது

டெல்லியின் அதிகாரத்திற்குட்பட்ட எந்த சிக்கலையும் இந்த லோக்கல் கட்சிகளால் தீர்க்க முடியாது

எங்களுக்கு வாக்களியுங்கள் டெல்லியில் உங்கள் குரலாக பேசுகின்றோம் என இவர்கள் கேட்கும் பொழுது , டெல்லிக்கும் தமிழக மக்களுக்கும் இடையில் எதற்கு இவர்கள்?

நேரடியாக டெல்லிக்கே தமிழகம் வாக்களிக்கலாம், இடையில் இவர்கள் என்ன தரகர்களா?

மனுஷ் என்பவன் இந்து தெய்வங்களை சீண்டினான் என நாம் சொல்லியதற்காக எம்மை எச். ராசா கோஷ்டி என்பீர்களாயின் அதை மகிழ்வோடு ஏற்க தயார்.

மனுஷை ஆதரித்து ஸ்டாலினை முதல்வராக்க போகும் உங்கள் சீரிய பணிக்கு வாழ்த்துக்கள்