இந்துக்களின் மனதை புண்படுத்திய மனுஷ் மீது நடவடிக்கை இல்லையா?
தனக்கு மட்டுமே அறிவு இருப்பது போலவும், வேறு யாருக்குமே துளியும் அறிவு இல்லாதது போல் நினைத்து கொள்பவர் மனுஷ் எனும் அப்துல் ஹமீது.
என்னமோ காளமேக புலவராக தன்னை நினைத்து கொண்டு இரட்டை அர்த்தத்தில் எழுதியவர், இப்பொழுது பல இடங்களில் வாங்கி கட்டுகின்றார்
காளி முதல் சக்தி வரை பெண் தெய்வங்களை தேவி என்பது இந்து மரபு, ஆண் தெய்வங்களை தேவன் என்பதும் அதன் பெண்பாலை தேவி என்பதும் இங்கு தொன்றுதொட்டு வருவது.
தேவி என்றால் காப்பவள் என பொருள், இதனால்தான் கோ என்றால் கடவுளையும் அரசனையும் குறிக்கும் பொருளில் வைத்த தமிழர்கள், தேவி எனும் பெயரை அரசிக்கும் சூட்டினர்
தேவி என்றால் காத்து நிற்பவள் என பொருள், இது இந்து மதத்தை தவிர எங்கு உண்டு?
அப்படிபட்ட தேவி எனும் பெயரை ஒரு அசிங்கமான கவிதைக்கு வைத்தால் யார் விடுவார்கள்?
இது ஒன்றும் “ஆடுற மாட்டை ஆடி கறக்கணும், ஆடாத மாட்டை ஆவணியில் கறக்கணும்” என திராவிட தலைவர்கள் சொன்னால் அட அறிஞர்டா, வசன கவிதைடா என கைதட்டி செல்லும் காலம் அல்ல
பிடித்து வைத்து இதற்கு முழு அர்த்தம் சொல் என செவிட்டில் அறையும் காலம்
மனுஷை மட்டும் விடுவார்களா?
அவரோ கருத்து சுதந்திரம் அது இது என புலம்புகின்றார்
கருத்து சுதந்திரம் பற்றி 2015ல் இந்த மனுஷ் என்ன சொன்னார் என்பதை பார்த்தால் மனிதரின் மதவெறி உச்சத்தில் இருப்பது தெரியும்
அப்பொழுது பாரீஸில் நபிபெருமானுக்கு கார்ட்டூன் வரைந்ததாக பத்திரிகை அலுவலகம் மேல் தாக்குதல் தொடுக்கபட்டு உலகமே அதிர்ந்தது
அப்பொழுது ஒபாமாவும் புட்டீனும் தன்னையே கவனிப்பதாக நினைத்த மனுஷ், கருத்து சுதந்திரத்திற்கு எல்லை உண்டு, மத விவகாரங்களில் கவனம் வேண்டும் என்றெல்லாம் கருத்து சுதந்திரத்திற்கு கடிவாளம் இட்டவர்
அதாவது இஸ்லாமை பற்றி சொன்னால் கருத்து சுதந்திரம் கிடையாதாம், கவனமாக பொறுப்பாக பேசவேண்டுமாம்
ஆனால் இந்துமதம் பற்றி சொன்னால் முழு கருத்து சுதந்திரமாம்
இப்படிபட்ட மதவெறியனை எங்காவது பார்க்க முடியுமா?
மனுஷ் தன்னை மதங்களை கடந்த பகுத்தறிவாதியாக வீரமணி கும்பலில் இணைத்து கொண்டால் அந்த கும்பல் என விட்டுவிடலாம்
ஆனால் நான் முழு இஸ்லாமியனாக இருப்பேன் இந்துக்களை மட்டும் திமுக கொள்கைபடி வம்புக்கு இழுப்பேன், காரணம் கலைஞரின் இந்து எதிர்ப்பின் வாரிசு நானே என இவர் கிளம்பினால் சும்மா விடுவார்களா?
போட்டு அடித்து நொறுக்கிவிடுவார்கள், இப்பொழுது அதுதான் நடக்கின்றது
எங்கோ பிரியாணிக்கு குத்துசண்டை போட்டு சிலரை அடித்த தகறாறில் ஓடிசென்று ஆறுதல் சொன்ன திமுக தலைவர் ஸ்டாலின், இப்பொழுது இந்துக்களை மிக கடுமையாக மனுஷ் பாதித்திருக்கும் நிலையில் கனத்த அமைதி
இந்து யுவராஜுக்கு ஒரு நீதி, இஸ்லாமியன் மனுஷுக்கு திமுகவில் ஒரு நீதியா? இதுதான் திராவிட கழக கொள்கையா?
மிஸ்டர் ஸ்டாலின், எங்காவது திமுகவினர் குத்துசண்டை நடத்தினால்தான் செல்வீர்களா? இந்துக்களின் மனதை புண்படுத்திய மனுஷ் மீது நடவடிக்கை இல்லையா?
அப்படியானால் அந்த பிரியாணி கடைக்கு ஓசி பிரியாணிக்கா சென்றீர்கள்???