நாட்டில் உள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்
எப்பொழுது மனம் விட்டு சிரிக்க வேண்டுமென்றால் ராமசந்திரன் படங்களை பார்ப்பதுண்டு
குறிப்பாக பாடல் காட்சிகளை மியூட் செய்துவிட்டு பார்த்தால் அவரின் அஷ்டகோணலான முகபாவத்தை பார்த்து சிரித்துகொண்டே இருக்கலாம், அதற்கு ஈடே இல்லை
சில படங்களின் நடிப்பு எனும் பெயரில் அவர் செய்யும் சேட்டைகளை கண்டால் நரசிம்மராவ் என்பவரே சிரித்து சிரித்து செத்திருப்பார்
கோபம் , காதல், உருக்கம் எல்லாவற்றிற்குமே உதட்டை கடித்து காமெடி செய்யும் அந்த சிரிப்பு நடிப்பு யாருக்கும் வராது
இன்று ஆயிரத்தில் ஒருவன் சிக்கி இருக்கின்றது
“நமக்கு வாய்த்த அடிமைகள் மிகவும் திறமைசாலிகள்” எனும் அந்த புகழ்மிக்க அதிமுக தத்துவம் இப்படத்தில் பேசபட்டது
ஜெயலலிதா மேல் விழும் மரத்தை ஒடி வந்து தாங்கி அவரை காப்பாற்றுவதாக அவர் இதோ புல் அப்ஸ் எடுத்து கொண்டிருக்கின்றார்
இப்படியே முதலமைச்சர் பதவி ஜெயா மீது விழாமல் அவர் காப்பாற்ற்றிவிட்டு சென்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்
அடுத்து “ஏன் என்று கேட்காமல் வாழ்க்கை இல்லை” என்ற பாடல் வேறு
ஆனால் அவர் கட்சியிலோ “ஏன் என்று கேட்காமல் இருந்தால்தான் வாழ்க்கை”
அது பன்னீருக்கும் பழனிசாமிக்கும் இன்னும் பலருக்கும் கிடைத்திருக்கின்றது.
இதில் பல இடங்களில் பழனிச்சாமிக்கும் பன்னீருக்கும் பொருத்தமான வசனத்தை பேசியிருக்கின்றார் ராமசந்திரன்,
அது “அடிமைகள் வரவேற்கபடுவதில்லை”
இது டெல்லியில் பழனிச்சாமிக்கும் பன்னீருக்கும் பேச வேண்டிய முக்கியமான வரிகள்
ஆக அடிமைகளான தமிழக அதிமுக அரசுக்கு இப்படத்தில் ஏகபட்ட வசனங்கள் உள்ளன, “அதோ அந்த பறவை போல..” என்ற பாடலும் கூட அவர்களுக்காகத்தான்
பழனிச்சாமி தன் அமைச்சர்களுடன் இப்படத்தை பார்த்தால் மனம் விட்டு அழுவார், நிச்சயம் அவர்களுக்கான படம் இது
“நாட்டில் உள்ள அடிமைகளில் ஆயிரத்தில் நான் ஒருவன்..” என பழனிச்சாமி அழுதால், அமைச்சரவையே அழுதுவிடாதா?
அந்த செங்கோடன் எனும் வில்லன் வேடம் வேறு அப்படியே தாடியும் ஆளுமாக மோடி பொலவே இருகின்றது, போதாதா?
நாகேஷ் போகுதே “மானம் கப்பல் ஏறி போகுதே” என பாடும்பொழுது அப்படியே தமிழக நிலை கண்முன் வருகின்றது
(முக்கியமான வரலாற்று செய்தி என்னவென்றால் இந்தி எதிப்பினை மிக தீவிரமாக திமுக செய்து கொண்டிருந்த பொழுது, தமிழ்நாட்டில் ஏகபட்ட பேர் இறந்தபொழுது கோவா பக்கம் ஜெயலலிதாவோடு ராமசந்திரன் ஆடிகொண்டிருந்த படம் இது
பின்னாளில் இவர்கள் தமிழ்நாட்டு முதல்வரானதுதான் விசித்திரம்)