காவேரியில் நீர் வரவில்லை
காவேரியில் நீர் வரவில்லை என பலர் செய்த ஆர்ப்பாட்டங்கள் கொஞ்சமல்ல, ஒரு சிலர் கொளுத்தபட்டார்கள், ஐபில் அரங்கம் முன் காவலர்களே தாக்கபட்டார்கள்
இன்னும் இந்தியா தமிழருக்கு துரோகம் இழைத்துவிட்டது, ஐநாவே தீர்வு, காஷ்மீர் ஆகின்றது இந்தியா என துடித்தார்கள்
இதோ காவேரி ஆடிமாதம் 3ம்முறை பொங்கி ஆயிற்று, பொங்கி என்ன சொல்லியிருக்கின்றது?
பொங்கி வந்த காவேரி இங்கு நடந்திருக்கும் சீரழிவினையும் மகா மோசடிகளையும் படம் பிடித்து காட்டிவிட்டு கடலுக்கு சென்றாயிற்று
ஆம் கால்வாய்கள் தூர்வார படவில்லை, பாலங்கள் பழுதுபார்க்க படவில்லை, மதகுகள் தரம் பார்க்கபடவில்லை
உள்ளுக்குள்ளே பெரும் சீர்கேட்டினை வைத்துவிட்டு காவேரி வரவில்லை என புலம்பிகொண்டிக்கின்றோம்
வந்த நீர் என்னாயிற்று? முக்கொம்பு அணை, கொள்ளிடம் பாலம் எல்லாம் அடித்து கிளப்புகின்றது
இதற்கு முதல் காரணம் மணல் திருட்டு என்பதும் இன்னொருகாரணம் பராமரிப்பு சரியில்லை என்பதும் தவிர ஒன்றுமில்லை
காவேரியின் குறுக்கே இருக்கும் இவைகளே இப்படி என்றால் கடைமடை பக்கம் நிலமை எப்படி இருந்திருக்கும்? சுத்தமாக ஒன்றுமில்லை
தமிழர்கள் காவேரி நீரை கேட்டார்களாம் ஆனால் அங்கு ஒரு கட்டமைப்பும் ஏன் பாலம் கூட சரியில்லாமல் இடிய, அணை மதகுகள் எல்லாம் உடைய நீர் கடலுக்கு செல்கின்றதாம் என்றால் யார் பொறுப்பு? என கன்னடம் சிரித்துகொண்டிருக்கின்றது
டெல்லியில் கோவணமும் சில நேரம் அதுவுமில்லாமல் நின்றெல்லாம் கத்திய அய்யாகண்ணு இதற்கு 8 வருடமாக ஆளும் அதிமுகவினை குற்றம் சொல்வாரா?
பாரதிராஜா, சைமன் அமீர் கோஷ்டி எல்லாம் ஜெயாவினையும் அவரை தொடர்ந்த பழனிச்சாமியும் இதற்கு பொறுப்பு என சொல்லுமா?
ஐநா பக்கம் போய் தமிழர் துரோக இந்திய அரசு என முழங்கிய இந்த திருட்டு முருகன் காந்தி, இயக்குநர் கவுதமன் எலலாம் வாய் திறப்பார்களா?
அவர்களை விடுங்கள் அவர்கள் திமுகவிற்கு எதிராகவும் சந்தடி சாக்கில் இந்திய தேசியத்திற்கும் எதிரானவர்கள் பேசமாட்டார்கள்
எதிர்கட்சி தலைவர் முக ஸ்டாலினாவது சொன்னாரா? சொல்லமாட்டார்
காரணம் திருவாரூர் தொகுதி கலைஞர் கையில் இருந்தது, ஏதும் இவர் சொன்னால் அதன் ச ம உ யார் என பழனிச்சாமி திருப்பி கேட்டால் ஸ்டாலின் கப்சிப்
இப்படி ஓட்டை விழுந்த கோட்டையினை வைத்துகொண்டுதான் காவேரிக்கு யுத்தம் நடத்தி இருக்கின்றோம்
கடைமடை பகுதிக்கெல்லாம் நீர் செல்லாததும் பாலங்கள் இடிந்து விழுவதை விட எல்லாம் அச்சமூட்டும் செய்தி கல்லணை பக்கம் மண் திருட்டும் அதை தாண்டி அணை கல் திருட்டும் நடந்திருக்கின்றது என்ற செய்திகள்
2 ஆயிரம் ஆண்டுகளாக நின்ற பொக்கிஷத்தை இந்த 50 ஆண்டுகால கொடூர ஆட்சி இழக்க வைக்க போகின்றது
தமிழகம் இதிலும் விழித்துகொள்ளாவிட்டால் ஆக போவது ஒன்றுமில்லை
நீர் மேலாண்மையிலும், கால்வாய் பராமரிப்பிலும், நீர் நிலைககளை பேணுவதிலும் கோட்டை விட்டு விட்ட அரசு ஜெயா மணிமண்டபம், ராமசந்திரனுக்கு வளைவு என ஒரு மாதிரி திரிகின்றது
இதைவிட மானகேடு இருக்க முடியாது
எவ்வளவு பெரும் வெட்க கேடு? மிக முக்கியமான ஆற்றின் கால்வாய்களை கூட காக்கமுடியாத அரசுகளா இவை?
காவேரியே இப்படி என்றால் பவானி ஆற்று நிலை இன்னும் மோசம், பெரும் கால்வாய்கள் எல்லாம் சிறுநீர் கூட செல்லமுடியாத அளவு குறுகிவிட்டது என்கின்றார்கள்
நிறைய இழந்துவிட்டோம்
இனி என்னாகும் என்கின்றீர்கள்?
அடுத்த தேர்தலுக்கு இப்பொழுதே திட்டம் தீட்டுவார்கள், எப்படி?
வீட்டுக்கொரு பிரிட்ஜ் தருவோம் என சொல்லும் ஒரு கட்சி, அட குடும்பத்திற்கொரு கார் தருவோம் என சொல்லும் மறுகட்சி
தமிழன் சந்தோஷமாக வாக்களிப்பான், அதன் பின் என்னாகும்?
அரசியலும் தமிழக அவலமும் தொடர்கதை..
(காவேரி வீணாவதை கண்டும், தமிழகத்தின் மிகபெரும் சொத்து நாசமாகிகொண்டிருப்பதை கண்டும் ஒரு பத்திரிகை மணல் திருட்டு, மராமத்து மோசடி பற்றி எழுதுமா?
ஒரு பத்திரிகை ,ஒரு டிவி இது பற்றி பேசுமா? நிச்சயம் பேசாது
இதுதான் தமிழக பத்திரிகை தர்மம். பிக்பாஸ் நிகழ்ச்சியும் ரஜினிக்கு திரிஷா ஜோடியானதும் அவர்களுக்கு அவ்வளவு முக்கியம்)