தென்னகம் மத சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட மாநிலம்
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதி பல இந்துக் குடும்பங்களுக்கு இடமும் உணவும் அளித்துக் காத்துள்ளது.
மேலும் ஒரு சில முஸ்லிம் குழுக்கள் வெள்ளத்தினால் சேதமடைந்த இந்துக் கோயில்களையும் சுத்தம் செய்யும் பணிக்கு தங்கள் உதவிக்கரங்களை நீட்டியுள்ளனர்.
இது நிச்சயம் நெஞ்சை நெகிழசெய்யும் செய்தி, இத்தேசம் காலம் காலமாய் எதிர்பார்த்திருந்த செய்தி
இம்மாதிரி நல்ல விஷயங்கள், மத ஒற்றுமைக்கு முன்னுதரானமான விஷயங்களை இந்தியனாக செய்பவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்
தென்னகம் மத சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட மாநிலம் என்பதை மறுபடியும் நிரூபித்திருகின்றார்கள்
இம்மாதிரி மக்கள் இருப்பதால் இனி கேரளாவினை தயக்கமின்றி கடவுளின் மாநிலம் என அழைக்கலாம்
இந்த ஒற்றுமை நாடு முழுக்க வளரட்டும், மதவாத சக்திகளும் அதன் மூலம் பிழைப்பு நடத்துபவர்களும் காணாமல் போகட்டும்
அந்த இஸ்லாமிய மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள், உங்களால் தேசம் பெருமை அடைகின்றது
இத்தேசத்தில் மத ஒற்றுமை காப்பவர்களுக்கான சிறந்த விருது வழங்கபட வேண்டும், இத்தேசத்திற்கு அது சால சிறந்தது
பின்னாளில் வழங்கபட போகு அந்த விருதினை இவர்களே பெறப்போகின்றார்கள், இவர்களே தகுதியானவர்கள்
(எவனாவது வந்து மாட்டுகறி தின்றவன் கோவிலுக்குள் சென்று சுத்தபடுத்துவதா என்றால் அவர்களை தூக்கி இடுக்கி அணையில் போடவேண்டும்)