இந்நாட்டில் இந்துக்களை விமர்சிக்கும் அளவு சமயசுதந்திரம் எந்த நாட்டிலும் இல்லை

இங்கு இந்துக்களை விமர்சனம் ஏகபட்ட திரைப்படம் வரலாம், கட்டுரைகள் வரலாம்,அதெல்லாம் ‍பகுத்தறிவு

ஆனால் சில விஷயங்களை சொல்லிவிட்டு கமலஹாசனும், மணிரத்னமும் பட்டபாடு கொஞ்சமல்ல‌

சகிப்புதன்மை என்பது எங்கே இருக்கின்றது??

Image may contain: 1 person, text

இந்நாட்டில் இந்துக்களை விமர்சிக்கும் அளவு சமயசுதந்திரம் எந்த நாட்டிலும் இல்லை என்பதில் கொஞ்சமும் மாற்று கருத்து இல்லை

இந்துக்கள் ஓரணியாக திரள முதலில் வித்திட்டவன் பிரிட்டிஷ்காரன் அவனே இந்து முஸ்லிம் கலவரங்களை ஏற்படுத்தினான், விளைவு நாடு உடைந்தது

அதன் பின் கலவரங்களும் காந்தி கொலையும் அதை மூடி வைத்திருந்தன‌

அதன் பின் இந்துக்களை சீண்டியது அல்லது அவர்களை ஒரு புள்ளியில் குவிக்கும் காரியங்களை பகுத்தறிவு வாதிகளும்,இந்து அல்லாத மற்ற சமயத்தாரும் கவனமாக செய்தனர்

இந்துக்களை அவர்கள் சீண்ட சீண்டவே அவர்கள் ஓரணியில் திரட்டபட்டனர்

இவ்வளவிற்கும் இந்நாட்டில் 80 இந்துக்கள், இது உண்மையில் இந்து பெரும்பான்மை நாடு

நேருவோ இல்லை அடுத்த பிரதமர்களோ இந்துக்களை சீண்டும் விதமாக பேசுவோரை சிறையில் அடைப்போம் என சட்டம் இயற்றி இருந்தால் இங்கு பாஜக வந்திருக்காது

கிறிஸ்தவ போதகர்களும், தமிழக பகுத்தறிவாளர்களும் இந்து மதத்தை விமர்சித்தது கொஞ்சமல்ல. இன்னும் மாற்றுமதத்தாரும் உண்டு

சுதந்திர இந்தியாவில் முளையிலே கிள்ளி இருக்கவேண்டிய பிரச்சினையினை அரசுகள் கண்டுகொள்ளவில்லை

பின் என்ன நடந்தது?

இங்கு ராமர் படத்தை செருப்பால் அடிக்கும் அளவு நிலமை சென்றது, இன்னும் என்னவெல்லாமோ செய்தார்கள்.

விமர்சனத்தையும் இன்னபிற விஷயங்களையும் தாங்கமுடியாத இந்துக்கள் ஓரணியில் திரண்டனர்

பாபர் மசூதியினை இடிப்பதை மத்திய அரசு தடுத்திருக்க முடியும், ராணுவத்தை அனுப்பி பாதுகாத்திருக்க முடியும் ஆனால் செய்யவில்லை

எதற்கோ எமர்ஜென்சியினை கொண்டு வந்தவர்கள் பாபர் மசூதியினை காக்கவும் கொண்டு வந்திருக்க முடியும், ஆனால் செய்யவில்லை

அது இடிபடட்டும் பாஜகவிற்கு அது கரும்புள்ளியாக அமையட்டும் என்ற அரசியலும் இருந்தது

ஆனால் அது எதிர்மறையாகி பாஜக பெரும் சக்தியாக உருப்பெற்றுவிடது

உண்மையில் பாபர் மசூதி இடிக்காமல் தடுக்க மறுத்தது காங்கிரஸ் கட்சி, மறுக்க முடியாது

குஜராத்தின் கலவரம் கோத்ரா ரயிலை எரித்ததை தொடர்ந்தே நடந்தது, குஜராத் கலவரம் என்பவர்கள் ரயில் எரிந்து செத்தவர்களை கணக்கில் எடுக்கமாட்டார்கள்

ஏன் என்றால் அப்படித்தான்

ஒரு விஷயத்தில் பாஜகநிலை பரிதாபமானது, மிருக பலத்தில் ஆட்சியில் இருக்கின்றார்கள், தேசத்தின் 60% மாநிலங்களை ஆளுகின்றார்கள்

ராமர் கோவிலை கட்டிவிடலாமா என்றால் நிச்சயம் அவர்களால் முடியும், ஆனால் கட்டவில்லை கட்டவும் மாட்டார்கள்

ஏன்? அவர்கள் அப்படித்தான். அது ஒரு மாதிரியான கட்சி

ஆனால் பாஜக எனும் கட்சி காங்கிரஸ் விட்ட தவறுகளினாலே உதித்து என்பதை மறுக்க முடியாது, அதைபற்றி எல்லாம் பேசமாட்டார்கள்

விஷயத்திற்கு வரலாம்

இங்கு இந்துமதம் விமர்சிக்கபட்ட அளவு இன்னொரு மதம் விமர்சிக்கபடவில்லை என்பது முக்கால உண்மை

இஸ்லாமையோ, கிறிஸ்துவத்தையோ யாரும் விமர்சிக்கட்டும் பார்க்கலாம்

சினிமாவில் கூட இந்து சம்பிரதாயம், இந்து கடவுள்களை சீண்டுவார்களே தவிர மறந்தும் கிறிஸ்தவ, இஸ்லாமிய பக்கம் செல்லமாட்டார்கள்

கொஞ்சம் துணிந்து சில காட்சிகளை வைத்ததற்கு மணிரத்னம் வீட்டில் குண்டே வெடித்தது

ஆனால் அம்பாள் எந்த காலத்திலடா பேசினாள், பூசாரியினை தாக்கினேன் என தொடங்கி, கமலஹாசன் முதல் இன்னபிற நடிகர்கள், நடிகைகள் எல்லாம்,இயக்குநர்கள் எல்லாம் இந்துமத்தத்தை கிழித்து தொங்கவிட்டபொழுது சத்தமே இல்லை

சத்யராஜ் , மணிவண்ணன் வரை அது தொடர்ந்தது

அப்படி பத்திரிகை, அரசியல், சினிமா என சகல பக்கமும் அடிவாங்கிய மதம் இன்னொன்று இல்லை

அந்த அளவு சேறு பூசுவார்கள், சாக்கடை எறிவார்கள் இன்னும் எவ்வளவு செய்யமுடியுமோ அவ்வளவு செய்வார்கள்

ஆனால் அதன் சிறப்பம்சம் எந்த மதத்திற்கும் வராது

புத்தமும் சமணமும் அதை ஒழித்தன, அது மீண்டது

பின்னாளில் ஆப்கானிய வம்சங்கள் அடக்கின, அது மீண்டது

வெள்ளையனும் மறைமுகமாக அடக்கி பார்த்தான் அது மீண்டது

தமிழக பகுத்தறிவுவாதிகள் தமிழ்மொழி இருப்பதே அம்மதத்தை ஒழிப்பதற்கு என கங்கணம் கட்டி இறங்கினர், அவர்கள் கொள்கை தோற்றதே தவிர இந்துமதம் அதன் போக்கில் இருந்தது.

நாத்திகம் எனும் மாயமான் இந்து எதிர்ப்பு எனும் கற்பனையில் வாழ்ந்தது, இப்பொழுது செத்துவிட்டது

எத்தனை இடர்பாடு வந்தாலும் செதுக்க செதுக்க மின்னும் வைரம்போல் இந்துமதம் மின்னிகொண்டே இருக்குமே தவிர அழியாது

இத்தனை எதிப்பு , அழிவுகளை தாண்டி வளர்ந்து இன்று இன்னமும் விமர்சனங்களை தாங்கி நிற்கும் இன்னொரு மதத்தை காட்டிவிட்டு இந்து பக்கம் வாருங்கள்

அரேபியாவின் பெரும்பான்மை மதம் இஸ்லாம், அங்கே இஸ்லாம் பற்றி பேசிவிட முடியும்?

புத்தமத தாய்பூமி திபெத், அங்கு புத்தனை விமர்சிக்க முடியும்?

பர்மாவிலும், இலங்கையிலும் புத்தனை நோக்கி கைநீட்ட முடியும்?

ஐரோப்பாவிலோ, வாடிகனிலோ இயேசுவினை விமர்சிக்க முடியும்?

டிரம்பின் அமெரிக்காவில் ஒருவன் பைபிளை விமர்சித்துவிடட்டும் பார்க்கலாம்?

ஜெருசலேமில் யூத மதத்தை ஒருவன் தொட்டுவிடட்டும் பார்க்கலாம்?

ஆக உலகெல்லாம் பெரும்பான்மை சமய மக்கள் அதிகமான நாடுகளில் அந்த சமயத்தினை விமர்சிக்க முடியாது, சில நேரம் அவர்களே பிரிந்து சண்டையிடுவார்களே தவிர இன்னொரு மதத்துகாரன் தங்களை விமர்சிக்க விடமாட்டார்கள்

இந்தியாவில் அது ஆச்சரியம்,பெரும்பான்மையான இந்து மதத்தை யாராலும் சீண்ட முடிகின்றது, விமர்சிக்க முடிகின்றது, கல்லெறிய முடிகின்றது

மற்ற மதங்களை போல வாரத்தின் சில நாட்களை பயமுறுத்தி வாங்கும் மதமல்ல அது, இந்து மதம் கடல் போல் பெரிய மனம் கொண்டது

அதனால் இந்த இம்சைகளை எல்லாம் கண்டு காணாமல் சென்றது, இவர்களோ அக்கடலை வற்றசெய்வேன் என அடக்க முயற்சிக்க அது சில இடங்களில் இப்பொழுது சுனாமியாய் சீறுகின்றது

உறுதியாக சொல்லலாம், உலகிலே மத சுதந்திரம் அதிகமாக உள்ள நாடு இந்தியா, இங்கு இந்துமதத்தை சீண்ட மிக அதிகபடியான சுதந்திரமே கொடுக்கபட்டுள்ளது என்பது உண்மை

இதனை Kavignar Thamarai சொல்லி இருக்கலாம், இதில் உண்மையினை தவிர ஏதுமில்லை

இவ்வளவிற்கும் அவர் இந்துமதத்தவரே அல்ல, கடவுள் நம்பிக்கை அற்றவர், அவரே சொல்கின்றார் என்றால் அர்த்தமென்ன?

100% உண்மையான வரிகள் அவை.

(தாமரை கிறிஸ்தவர்களையும் , தமிழக பகுத்தறிவு இம்சைகளையும் சேர்த்திருக்கலாம்)