தம்பி, இன்றைய நிகழ்ச்சி என்ன?
“தம்பி, இன்றைய நிகழ்ச்சி என்ன?
ஆனாலும் இந்த பஜனை கோஷ்டி அட்டகாசத்தை தாங்க , எதையும் தாங்கும் இந்த இதயத்தாலே முடியவில்லை
இதற்கு மேலும் கொடுமையாக இந்த மானாட மயிலாட கோஷ்டி வேறு வந்துவிடும் என சிலர் பயமுறுத்துகின்றான், மனம் கலங்குகின்றது தம்பி
நீயும் நானும் எவ்வளவு எழுதினோம், நான் எழுதிய “ஏன் வேண்டும் இன்ப திராவிடம்?” எனும் நூலையோ , நீ எழுதி தள்ளிய எத்தனையோ புத்தகங்களில் ஒன்றையோ அப்பக்கம் யாரும் வாசித்து கண்டாயா?
மாறாக தம்பிகள் கட்டை அடித்து நாரதர் போல் ஆடுகின்றார்கள், நந்திகள் போல் மிருதங்கம் வாசிக்கின்றார்கள் இதற்கா ஆசைபட்டோம் மன்சாட்சியினை தொட்டு சொல்?
இப்படிபட்ட தலைமுறையினையா உருவாக்கிவிட்டு வந்துவிட்டாய்?”