சங்க இலக்கியங்கள் எல்லாம் கடவுளை பற்றி சொல்கின்றன‌

சங்க இலக்கியங்கள் எல்லாம் கடவுளை பற்றி சொல்கின்றன‌

சிலப்பதிகாரம் ஆரியங்காவு இயக்கியினை சொல்கின்றது, இன்றைய இசக்கி எனும் தெய்வத்தின் வடிவம் அது

மணிமேகலை பூதங்களை பற்றி சொல்கின்றது, சிலப்பதிகாரம் இந்திர விழா பற்றி எல்லாம் சொல்கின்றது

காளிதேவி பற்றியும் இன்னும் ஏகபட்ட இந்து தெய்வங்களை பற்றியும் ஏகபட்ட பாடல்கள் உண்டு

அவ்வையார் முருகனை பற்றி பாடியது போலவே விநாயகர் அகவலையும் எழுதியுள்ளார்

இன்னும் ஏராளமான இந்துக்களின் தெய்வங்களை பற்றியும், விழாக்களை பற்றியும் தமிழக பண்டை இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றன‌

அப்படியே நீத்தாருக்கு செய்ய வேண்டிய சில கடமைகளையும் அவை சொல்கின்றன‌

அப்படி கலைஞர் சமாதியில் நீத்தாருக்கு தமிழர் செய்ய்யும் கடமையினை செய்தால் அது தமிழர் மரபாம்

ஆனால் பண்டைய இலக்கியங்களில் சொன்னபடி விழா கொண்டாடினால், தெய்வங்களை வழிபட்டால் அது மூட நம்பிக்கையாம்