கலைஞரை பற்றி சொன்னால் அத்தனையும் பொய் என ஓடுவீர்களா?

Image may contain: 5 people, including Moses Asli, people smiling, meme and textதிமுக எனும் இயக்கம் எவ்வளவு வலுவானது, எவ்வளவு பாரம்பரியமும் சில பெருமைகளையும் கொண்டது

அப்படிபட்ட இயக்கம் இந்த சாமானியன் என்பவனை பார்த்தா பயப்படுகின்றது, எப்படி எல்லாம் அலறுகின்றார்கள் அதன் தொண்டர்கள்

அட பாவிகளா,

நாம் அமைச்சரும் இல்லை, பெரும் கருத்து சொல்லும் அரச பதவியிலும் இல்லை அவ்வளவு ஏன் பத்திரிகையாளனும் அல்ல, எந்த கட்சியில் இருப்பவனும் அல்ல‌

சாலைய்யோரம் நடந்து செல்லும் பாமரன், பார்க்கும் விஷயங்களை கொஞ்சம் வரலாற்று பிண்ணணியோடு பார்க்கும் ஒரு சாதரண மனிதன்

அவனை கண்டா நீங்கள் அஞ்சுகின்றீர்கள்?

மோடிக்கும், ராகுலுக்கும், தமிழக அமைச்சர் பெருமக்களுக்கும் போட்ட மீம்ஸ்களை எமக்குமா செய்கின்றீர்கள்

கிட்டதட்ட ஆயிரம் பேர் இன்று மட்டும் விசாரிக்கின்றார்கள், அவ்வளவு ஆதரவுகள் உங்களால் பெருகுகின்றது நன்றி

என்ன சொன்னீர்கள்?

கலைஞர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவரா?

நேருவினையும், காமராஜரையும் அவர் விமர்சித்தது கொஞ்சமா? இந்திராவினை படுத்திய பாடுகள் என்ன‌

ஆக அவரும் அவர் கட்சிக்காரர்களும் யாரையும் விமர்சிக்கலாம், அவரை தொட கூடாதா?

இங்கு சிலபேர் ஏன் கலைஞரை கண்டாய் என கத்தல் வேறு

கலைஞரின் பெயரை போஸ்ட்மார்டம் அளவிற்கு சீரழித்த சோ.ராமசாமியும் ஜெயகாந்தனும் சென்று பார்த்தபொழுது நீங்களெல்லாம் எந்த .. கீழ் இருந்தீர்கள்??

அயோக்கிய பயலுகளா,

ராமசந்திரனை கலாய்த்தால் பிடிக்கின்றது, பாஜகவின் சங் பரிவார முகத்தை சொன்னால் இனிக்கின்றது

திமுகவால் காப்பாற்றபட்ட புலிகதையினை சொன்னால் ஓடிவந்து கேட்பீர்கள்

ஆனால் கலைஞரை பற்றி சொன்னால் அத்தனையும் பொய் என ஓடுவீர்களா?

உண்மையில் அண்ணா சொன்னது போல் உள்ள கட்டுரையின் பெரும்பான்மை வரிகள் என்னுடையதல்ல, ஜெயா, ராமசந்திரன் வரிகளே எம்முடையது

அந்த பதிவு 1973ல் “சொர்க்கத்தில் அண்ணா” என கண்ணதாசன் எழுதியதின் தழுவல்

முதலமைச்சரோ நான், உத்தரவிடுவதோ அவன் என்பது கண்ணதாசனின் எழுத்து

அந்த கடிதம் இன்றும் புத்தகவடிவில் உண்டு முடிந்தால் கண்டுபிடித்து கிழிக்கவும்

உங்களின் கணக்குபடி திமுக என்பது முக ஸ்டாலினிடம் இருந்து தொடங்குகின்றது, கால கணக்குபடி அது நீதிகட்சியில் இருந்து தொடங்குகின்றது

நாம் அந்த நீண்ட வரலாற்றில் நீந்தும்பொழுது இப்படியான காட்சிகளும் காண கிடைத்தன , இன்னும் ஏராளம் உண்டு

எல்லா கட்சியினையும் விமர்சிப்பது போலத்தான் உங்கள் கட்சியினையும் விமர்சித்தோம், திமுக ஒன்றும் புனிதமான மதம் அல்ல‌

ஒரு நல்லவனை , ஒருதேசபற்றாளாஇ கூட உருவாக்கா கட்சி அது, வைகோ என்ற ஒரு சோறே பதம்

உங்கள் கட்சியின் ஒருமுகத்தை எழுதி இன்னொரு தமிழன் பிரசன்னா, நாஞ்சில் சம்பத் போல மாற எம்மால் முடியாது

உங்களின் உண்மை முகத்தை கிழிப்பது தவறென்ரால் ஆயிரம் முறை அந்த தவறைச் செய்ய தயார்

சில குரைப்புகல் என்னை ஏன் பிளாக் செய்தாய் என கேட்டுகொண்டே இருக்க்கின்றன‌

வீட்டுக்குள் வந்து குரைத்தால் வெளிதள்ளி கதவை சாத்தத்தான் செய்வார்கள்