அரசியல் விமர்சனத்திலும் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை போலும்

உண்மையில் நாம் அதிகம் விமர்சித்தது புலிகளையும் அங்கிள் சைமனையும், ராமசந்திரனையும் அவர் கட்சியினைரையும்

அடடா, அக்கட்சிக்காரர்கள் எல்லாம் எவ்வளவு நல்லவர்கள் என்பது இப்பொழுதுதான் புரிகின்றது

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை, நண்பனும் இல்லை என்பார்கள்

அது அரசியல் விமர்சனத்திலும் வரலாம் போல‌

இப்பொழுதெல்லாம் மிக நிதானமானவர்களும், விமர்சனத்தை ஏற்றுகொள்ளும் பக்குவமும் அதிமுகவினருக்கே அதிகம் இருக்கின்றன‌

அவர்கள் திமுகவினரை விட அதிககாலம் தமிழகத்தை எப்படி ஆண்டார்கள், ஆள்கின்றார்கள் என்பது இப்பொழுதுதான் புரிகின்றது

இப்படிபட்ட சுத்த அறிவுகெட்ட திமுகவினர் இருக்கும் பொழுது பழனிச்சாமி ஏன் முதல்வராக மாட்டார்?

பழனிச்சாமி என்ன வருங்காலத்தில் வளர்மதி முதல்வர் ஆனாலும் ஆச்சரியமில்லை

பல உண்மைகள் இப்பொழுதுதான் விளங்குகின்றன‌

முகநூலிலே இப்படி ஒரு மாதிரி மட்டமாய் பொங்கும் கோஷ்டி மேடை கிடைத்தால் எப்படி பொங்கும்?

மக்கள் எல்லாம் எப்படி காதை பொத்திகொண்டு ஓடியிருப்பார்கள், எவ்வளவு வெறுப்பு வந்திருக்கும்?

ஊழலோ இன்னபிற குற்றசாட்டுக்கள் இருந்தும் அதிமுக இன்றும் வெற்றிகளை குவிப்பது இவர்களின் இந்த அற்பமான கொடூரமான பேச்சுக்களிலும், அசிங்கமான நடத்தையாலும் அன்றி வேறல்ல‌

பின் ஏன் அதிமுகவிற்கு வோட்டு விழாது?

அதிமுகவின் ஏராளமான ஸ்லீப்பர் செல்கள் திமுகவில்தான் சுற்றிகொண்டிருக்கின்றன‌