கில்லாடி கிளைவ் : 06
கில்லாடி கிளைவ் : 06
மூன்றாம் முறையாக பொங்கிய சாய்புவின் படைகள் மிகுந்த ஆக்ரோஷமாக போரிட்டன , காரணம் அந்தி நெருங்கிகொண்டிருந்தது
கிளைவோ அசால்ட்டாக சமாளித்தார் எனினும் மிக மூர்க்கமாக போரிட்ட சாய்பு தரப்பு 20 வீரர்களை கொன்றிருந்தது, கிளைவோ ஒவ்வொரு வீரனும் முக்கியம் எனு இக்கட்டான நிலையில் இருந்தார்
ஆயினும் 500 வீரர்களை சாய்பு படை இழந்திருந்தது, மொகரம் அன்று செத்தால் சொர்க்கமும் முக்கியமாக அந்த கன்னிகளும் என்ற கனவில் சாய்பு வீரர்களின் ஆக்ரோஷம் அதிகமாயிற்று
ஆயினும் கோட்டையினை கைபற்றவில்லை , நேரம் ஆனபடியினால் பின் வாங்கினார்கள்
இரவும் வந்தது, அவர்கள் வரவில்லை. உள்ளே இருந்த கிளைவிற்கு யோசனை பெருகிற்று, எங்கே சென்றார்கள்? 4ம் கட்ட தாக்குதலா? இல்லை பெரும் படையுடன் வளைக்க போகின்றார்களா? இன்றிரவு நம் கதை முடிந்துவிடுமா?
ஆனால் பயத்தை வெளிகாட்டி கொள்ளாமல் நிலமையினை கவனித்துகொண்டிருந்தான் பொழுது விடிந்தது ஆனால் படைகளை காணவில்லை
ஆம், அவர்கள் ஓடியிருந்தார்கள். ஏதோ மொகரத்தின் சாவுக்காக பாடுபட்டிருக்கின்றார்கள், அது இல்லை என்றதும் இரவிலே பறந்துவிட்டார்கள்
அவர்கள் விட்டுசென்ற ஆயுதங்களை கைபற்றினான் கிளைவ், அத்தோடு ஆற்காடு கோட்டையினை கிளைவ் கைபற்றியதாக அறிவிக்கபட்டது
நம்பமுடியாமல் தலைகவிழ்ந்து நின்றான் டுப்ளே, சாந்தா சாகிப் கதறிகொண்டிருந்தான், சென்னை ஜார்ஜ் கோட்டையோ ஆனந்த கண்ணீரில் இருந்தது
ஆங்கிலேயரும் ஆளமுடியுமா? ஆங்கிலேயர் கோட்டையினை கைபற்றிவிட்டார்களா? நாம் பிரான்ஸ்காரர்களை வென்றுவிட்டோமா என நம்ப முடியாமல் குதித்துகொண்டிருந்தார்கள்
நம்ப முடியாத அதிசயம் அது, அவர்களுக்கு பெரும் ஆச்சரியம் அது
அந்த உற்சாகத்திலும் அவர்கள் கிளைவினை பற்றி சிந்தித்தார்கள், நிச்சயம் சாந்தா சாகிப் வருவான், அதற்குள் கிளைவிற்கு உதவ வேண்டும் என ஆயிரம் வீரர்களை அனுப்பினார்கள்
கிளைவ் வெற்றிமுகம் காட்ட மராட்டியனான மொராரி ராவும் வந்து சேர்ந்துகொண்டான்
இந்த படையுடன் சாந்தாசாகிப்பின் படைகளை விரட்டி விரட்டி அடித்தான் கிளைவ், ஆற்காட்டுக்கும் ஆரணிக்கும் இடையிலுள்ள கோட்டை ஒன்றினை அதிரடியாக கைபற்றி சாந்தா சாகிப்பிற்கு அதிர்ச்சி கொடுத்தான்
காஞ்சிபுரம், ஆரணி என வரிசையாக கையில் எடுத்தான் கிளைவ், ஆரணிக்கு ஒரு கவர்னர் இருந்தார், அவர் கிளைவிடம் பணிந்து இனி முகமது அலியே கர்நாடக நவாப் என ஏற்றுகொண்டார்
நிலமையினை கணித்த சாகிப் பாண்டிச்சேரி நோக்கி ஓடினனான், கிளைவிற்கு அவனை விரட்டி செல்லும் என்ணம் இருந்தது
ஆனால் கிளைவ் தளபதி, உத்தரவினை கிழக்கிந்திய கம்பெனியின் தலமையே தரவேண்டும். யுத்தம் கிளைவின் சொந்த விருப்பம் என்றால் அந்த அடியில் பாண்டிச்சேரியே கிடைத்திருக்கும்
ஆனால் கிழக்கிந்திய கம்பெனி நிர்வாகிகள் செலவு கணக்கு எல்லாம் பார்த்து கிளைவினை திரும்ப சொன்னார்கள்
இந்நிலையில் சாந்தாசாகிப்பிடம் இருந்து பறிக்கபட்ட சம்பள பணம் நிரம்பிய பணப்பெட்டி மோராரி ராவின் கும்பலிடம் சிக்கியது. அது கூலிப்படை அல்லவா? பெட்டி கிடைத்தவுடன் ஒரு பகுதி பறந்தது
எனினும் ஒரு பிரிவு கிளைவோடு நின்றது
மேலிடம் உத்தரவு, மொரார் ராவ் கும்பலின் ஓட்டம் என கிளைவின் பலம் குறைந்ததை அறிந்த சாய்பு பெரும் படையுடன் சென்னை நோக்கி வந்தான்
பல இடங்களை பாழ்படுத்தினான், கிளைவின் தலை இன்றி திரும்பமாட்டேன் என உறுமிகொண்டிருந்தான்
கிளைவோ தன்னிடம் இருந்த படையுடன் ஒடிவந்து மோதினார், சண்டை காவேரிபாக்கத்தில் நடந்தது
ஏராளமான சாய்பு வீரர்கள் இறந்தனர், சிலர் கைதிகளாக பிடிக்கபட்டனர். அக்கைதிகளில் ஒருவன் சாஹிப்
ஆறடி உயரமும் அற்புதமான வீரனுமான அவனை கிளைவிற்கு பிடித்து போயிற்று, அவனை தன் வலதுகரம் ஆக்கினான்
(பின்னாளில் அவனுக்கு பயிற்சிகளை எல்லாம் கொடுத்து தென்னகத்து குறுநில மன்னர்களை எல்லாம் அடக்கினான், சாகிப்பினை கான் சாகிப் ஆக்கினான்
கான் என்றால் தலைவன் என்று பொருள்
அந்த கான் சாகிபினை மதுரை ஆளுநராக ஆக்கினான் கிளைவ், அங்குதான் கான் சாகிப் மருத நாயகம் என மக்களால் அழைக்கபட்டான்
கான் நாடு என்ற பெயர் அவனாலே இராமநாதபுரம் பக்கம் உருவானது, பின்னாளில் அது கானாடு என்றானது, இப்பொழுது கானாடு காத்தான் என்றெல்லாம் அந்த பகுதியில் சில ஊர்கள் உண்டு
மதுரைக்கு அவன் நல்லாட்சி கொடுத்தபொழுது கிளைவ் வங்க போர்களில் பிசியானார், இங்கு நவாப்புக்கும் மருத நாயகத்திற்கும் மோத, பின் வெள்ளையருகும் மருத நாயகத்திற்கும் மோத மருதநாயகம் கொல்லபட்டான்
மருதநாயகம் கதையினை எப்படியாவது கமல் எடுப்பார் என எதிர்பார்த்தோம், நமக்கோ மய்யம் தான் கிடைத்திருக்கின்றது)
தொடர்ந்து முன்னேறிய கிளைவ் டேவிட் கோட்டையினை அடைந்தான், அதன் அருகில்தான் முன்பு டுப்ளே தன் வெற்றியின் அடையாளமாக கட்டிய வெற்றி தூண் இருந்தது, அதில் டூப்ளே சிரித்துகொண்டிருந்தான்
வந்த வேகத்தில் தன் கையால் டூப்ளேவின் சிலையினை சிதைத்தான் கிளைவ், மேற்கொண்டு அந்த அடையாளமே இல்லா வகையில் அது நொறுக்கி துடைக்கபட்டது
தன்னை கைதியாக டூப்ளே கொண்டு சென்ற அவமானத்தை அங்கு துடைத்து நின்றான் கிளைவ்
டூப்ளேக்கு மாபெரும் அவமானம், இந்தியாவினை பிரெஞ்ச் காரர்கள் கைபற்றி ஆள்வார்கள் என அவன் போட்ட திட்டத்தை 24 வயது கிளைவ் நொறுக்கி அதை கையில் எடுத்திருந்தான்
டூப்ளே முன்பு டூப்ளியாபாத் என்றொரு ஊரை நிர்மானம் செய்திருந்தான் அல்லவா? அதுவும் தடமில்லாமல் அழிக்கபட்டது
எல்லாம் சரி, இனி திருச்சி சென்று முகமது அலியினை அழைத்து வந்து ஆற்காட்டில் முடிசூட்ட வேண்டும்
ஆனால் அடிபட்ட புலியான சாய்பு சாந்தா சாகிப் எல்லாம் அங்கேதான் இருக்கின்றார்கள், டூப்ளேயும் உண்டு பின் எப்படி?
நாய் என்றாலும் சொந்த வீட்டில் பாயும், புலி என்றால் விடுமா?
இந்நிலையில்தான் பிரிட்டிசாரின் தளபதி லாரன்ஸ் சென்னை திரும்பினார், அவர் முன் பாகுபலி கட்டப்பாவாக பணிந்து நின்றான் கிளைவ்
என்னால் முடியாததை நீ சாதித்திருக்கின்றாய், நீ எனக்கு கீழ் இருக்க கூடாது, என் அருகில் இருக்க வேண்டும் என தனகு நிகராக அமர்த்தி கொண்டான் லாரன்ஸ்
இருவர் தலமையேற்று திருச்சிக்கு சென்றார்கள், அடித்த அடியில் சாந்தாசாகிப் கலங்கி ஓடினான்
முகமது அலியினை மீட்டு வெற்றிகரமாக கர்நாடக நவாப் ஆக்கினார் பிரிட்டிசார்
சாந்தா சாகிப் சண்டையில் கொல்லபட்டான், முகமது அலிக்கு தடை இன்றி போனது
இந்தியாவில் அவர்கள் முதல் வெற்றி இது, போரில் வென்று தங்கள் பிரதிந்தியாக கர்நாடக நவாபை ஆளவைத்த பெரும் திருப்பம் இது
வியாபாரத்தை விட சண்டையிலும் அதில் செய்யும் வசூலிலும் கப்பத்திலும் ஏகபட்ட வருமானம் என அவர்கள் கண்டுகொண்ட இடம் இது
இந்த மாபெரும் வெற்றிக்கு ஒரே காரணம் கிளைவ்
அப்பக்கம் பெரும் சவாலக கருதபட்ட டுப்ளேவிற்கும் அவனின் தளபதி புஸ்ஸி என்பவனுக்கும் முட்டிகொண்டது, டுப்ளே பிரான்சுக்கு அழைக்கபட்டார்
உண்மையில் பிரான்ஸ் படை அவ்வளவு சிறப்பு அல்ல, டுப்ளே பாகுபலி நாசர் சாயலே அன்றி வீரன் அல்ல, பிரெஞ்ச் படையிடம் கட்டுபாடும் இல்லை
ஆனால் ஆங்கிலேய படையினை கிளைவ் மிகுந்த கட்டுபாட்டுடனும் , பலமாகவும் கட்டியாண்டான். அவனின் வெற்றிக்கு அதுதான் காரணம்
முன் நின்று சண்டையிடுபவன் அவன் என்பதால் படையில் மரியாதையும் இருந்தது
பிரான்சுக்கு சென்றாலும் டுப்ளே சும்மா இருக்கவில்லை அவனின் நரிதந்திரம் வேறுவகையில் வேலை செய்தது
பிரிட்டன் கிழக்கிந்திய கம்பெனியில் தன் கைகூலிகளை வைத்து கொண்டு கிளைவிற்கு பெரும் புகழோ உதவியோ கிடைக்காமல் தடுத்தான்
கிளைவ் பயிற்சிபெற்ற ராணுவ வீரர்களை கேட்டால் கம்பெனி கப்பலில் சரக்கு ஏற்றி இறக்கும் ஆட்களை கொடுக்குமளவு டூப்ளேயின் தந்திரம் இருந்தது
ஆயினும் கிளைவினையொ அவனின் வெற்றிகளையோ டுப்ளேயால் தடுக்க முடியவில்லை, அவனின் கீர்த்தி பெருகிற்று
தென்னகத்தில் பிரிட்டானியர் அதிகாரம் பெருகிற்று, பிரெஞ்ச் அதிகாரம் சுருங்கிற்று
நவாபுக்கு எதிராக கப்பம்கட்ட மறுத்த குறுநில மன்னர்களை எல்லாம் கொன்றோ மிரட்டியோ செல்வத்தை குவித்தது ஆங்கிலேய படை
(இதில் ஒரு விஷயத்தை சொல்லலாம், இந்த கட்டபொம்மன் புலித்தேவன் என நிறைய மாவீரர்கள் இருந்தாலும் இவர்கள் எல்லாம் நவாபிற்கு கட்டுபட்டவர்களே
நவாப் குடும்பம் வாரிசு சண்டையில் சிக்கியபொழுதுதான் இவர்கள் தனி அரசென சொன்னார்கள்
ஒருவேளை வெள்ளையன் வராமல் இருந்தால் கூட, நாவாபில் யார் மிஞ்சினார்களோ அவர்கள் இவர்களிடம் கப்பம் வசூலிப்பதோ இல்லை புளியமரத்தில் தொங்க விடுவதோ உறுதி)
கிளைவ் கம்பெனியின் மகா முக்கியமானவர் ஆனார், கம்பெனி வளர்ந்தது
ஆனால் கிளைவின் உடல்நிலையோ மோசமாகி கொண்டிருந்தது
தொடரும்..