உண்மைக்கு வைரம் போல பல முகம் உண்டு என சொன்னவர் மகாத்மா காந்தி
நீ நிலையானவன் அல்ல, உன்னை நம்ப முடியாது. ஒரு நேரம் ஒன்றை சொல்கின்றாய் மறுநேரம் மறுக்கின்றாய் நீ குழப்பவாதி என ஏகபட்ட உள்பெட்டி செய்திகள்
ஒரு விஷயத்த்தை பல கோணங்களில் பார்ப்பதால் வரும் சிக்கல் இது, எம் மனநிலை அப்படித்தான்
உண்மைக்கு வைரம் போல பல முகம் உண்டு என சொன்னவர் மகாத்மா காந்தி, அது உண்மையும் கூட
அப்படி ஒரு முகத்தை சொன்னால் புகழ்வதும், இன்னொரு முகத்தை சொன்னால் திட்டுவதும் அவர்கள் பாணி
அதற்காக எம் மனதில் தோன்றுவதை அய்யயோ இப்படி சொன்னால் திட்டுவார்கள் என்று எழுதாமலோ இல்லை இப்படி சொன்னால் புகழ்வார்கள் என எழுதவோ எம்மால் முடியாது
மனம் என்ன சொல்கின்றதோ அப்படி எழுதுவோம்
சிலர் சொல்கின்றார்கள் சில திமுகவினரை ஏன் பிளாக் செய்தாய், வாதிட்டால் என்ன?
பிளாக் செய்யும் கலாச்சாரத்தை சொல்லி கொடுத்தது தும்பிகள், அவர்களை எல்லாம் தடுத்திராவிட்டால் இந்நாள் வரை அவர்களுக்குத்தான் பதில் சொல்லிகொண்டிருக்க வேண்டும்
இப்பொழுது இவர்களை விட்டிருந்தாலும் தலைகீழாக தொங்குவார்கள், அவர்களுக்கு பதில் சொல்லவே நேரமிருக்காது
நம்மை புரிந்து கொள்ளாதவர் அல்லது குறிப்பிட்ட எல்லைக்குள் அடக்க நினைப்பவர் சகவாசம் எதற்கு?
சனியன்களை விரட்டினால்தான் நல்லது, அதனைத்தான் ஆத்ம சுத்தியுடன் செய்துகொண்டிருக்கின்றேன்
தமிழகத்தின் மிகசிறந்த அரசியல் படம் இருவர், அமைதிபடை எல்லாம் அதன் நுட்பாமான அரசியல் காட்சிகள் முன் நிற்க முடியாது
50 ஆண்டுகால அரசியலை இரன்டுமணி நேரத்தில் அட்டகாசமாக சொன்ன படம் அது
முன்பொரு காலம் கலைஞர் சொன்னபடி “தமிழன் சோற்றால் அடித்த பிண்டம் ” என்பதால் படம் தோற்றிருக்கலாம் ஆனால் காலத்திற்கும் நிற்கும் படம்
அந்த மணிரத்னம் இருவர் இரண்டாம் பாகம் எடுக்கலாம் , அவரோ “செக்க சிவந்த வானம்” என எதனையோ எடுத்து கொண்டிருக்கின்றார்
அரசியல் வானம் தெளிவாக இருக்கும் பொழுது அவருக்கு மட்டும் எங்கோ வானம் சிவக்கின்றதாம்
இப்பொழுது இருவர் இரண்டாம் பாகம் வரவேண்டிய நேரம் , ஆனந்தன் கட்சி அடிமை நிலையினையும் தமிழ்செல்வம் கல்லறை முன்பு பஜனை கோஷ்டி நடப்பதோடு படத்தை முடித்தால் சூப்பர்ஹிட் ஆகும்