போட்டியின்றி தி.மு.க தலைவராகிறார் ஸ்டாலின்


போட்டியின்றி தி.மு.க தலைவராகிறார் ஸ்டாலின் – எதிர்த்து யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை : செய்தி

எந்த பெரும் கட்சியும் அதன் இரும்பு தலைவன் இறந்தபின் தடுமாறும் , உடையும், சிதறும் அதன்பின் நிலைபெறும் சிலது காணாமலே போகும்

ஒரு கப்பல் அலையில் சிக்கி கொண்டு அது தடுமாறுவது போல் ஆடும், அதன் பின் சீரடையும்

திமுகவின் அத்தைகைய சிக்கல் அண்ணா விடைபெறும்பொழுது இருந்தது , இதில் பாடம் கற்றார் கலைஞர்

ராமசந்திரன் விடைபெற்ற பொழுது , ஜெயா விடைபெற்ற பொழுது அதிமுகவிலும் அதுவே நடந்தது

ஆனால் திமுக அப்படியான நெருக்கடிகளை சந்திக்காத அளவு ராஜதந்திர நகர்வுகளை செய்துவிட்டே கலைஞர் விடைபெற்றிருக்கின்றார், அட்டகாசமான நகர்வு இது

இனி திமுக தலைவர் ஸ்டாலின், அதாவது கலைஞருக்கு பின் திமுகவின் இரண்டாம் தலைவர், வாழ்த்துக்கள்

என்ன விமர்சனம் இருந்தாலும் தமிழகத்தில் நடக்கும் ஒரு மாதிரியான ஆட்சியினை அகற்றவும் நல்லாட்சி வழங்கவும் அவர் ஒருவரே நம்பிக்கை

நிச்சயம் ஜாதி, மதம், பிரிவினைவாதம் என ஆபத்துக்கள் இல்லாத, மாநில நலம் பேணும் ஆட்சியினை இப்போதைக்கு ஸ்டாலினை தவிர யாரும் கொடுக்க முடியாது

அதை சொல்லத்தான் வேண்டும், அதுதான் யதார்த்தம்

அவர் அதை செய்ய வாழ்த்துவோம், கலைஞர் விட்டுசென்ற பணிகளை அவர் தொடரட்டும்

அழகிரி தன் தந்தை மீது கொஞ்சமேனும் மரியாதையும் அன்பும் கொண்டவரென்றால் கட்சிக்கு இடைஞ்சல் செய்யாமல் இருப்பதே சரி

கட்சி இன்னும் சில நெருப்பாறுகளை கடந்து, கலைஞர் இல்லாவிட்டாலும் அதன் சிறப்பான பயணம் தொடரும் என நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பொழுது அழகிரி எதிர்துருப்பு போடுவது அவர்மேல் எல்லோருக்கும் வெறுப்பினையே கொடுக்கும்

அழகிரி திமுகவின் நிலைத்தன்மையும், வெற்றியினையும் ஒரு தொண்டராக பொறுப்பினை உணர்ந்து அமைதி காத்தால் அவர் மேல் தானாக மரியாதை வரும்

பின்னர் கிடைக்க வேண்டிய மரியாதை தானாக கிடைக்கும்

அழகிரி சிந்திப்பது நல்லது

இதையும் மீறி அழகிரி ஏதும் முயற்சித்தால் ஜெ. தீபா அளவிற்கே செல்வாரே அன்றி ஒன்றும் செய்துவிட முடியாது


அழகிரி திமுகவிற்கு எதிராக ஊர்வலம் செல்ல போகின்றாராம், போகட்டும்

ஆனால் திமுகவிற்கு எதிரான ஊர்வலம் கலைஞர் சமாதியில் முடிந்தால் என்ன அர்த்தம்? திமுகவினை எதிர்த்துவிட்டு அவர் சமாதிக்கு செல்வது எதற்கு?

கலைஞரின் ஆன்மா திமுகவில்தான் வாழ்கின்றது

அதனால் அழகிரி உண்மையிலே திமுக எதிர்ப்பு ஊர்வலம் நடத்தினால் அது அருகிலிருக்கும் ராமசந்திரன் சமாதியிலோ, ஜெயா சமாதியிலோ முடியட்டும்

அதுதான் அர்த்தமுள்ள ஊர்வலம்