ஸ்டாலின் திமுக தலைவராவதில் தினமலருக்கு ஏக மகிழ்ச்சி
கலைஞர் வரிகளில் சொல்லவேண்டும் என்றால் “கண்கள் பனித்தது, இதயம் கனித்தது”
இந்த மனமும், இந்த உறவும் என்றும் தொடரட்டும்
ஸ்டாலின் திமுக தலைவராவதில் தினமலர் பத்திரிகைக்குத்தான் ஏக மகிழ்ச்சி
அவருக்கு “பட்டாபிஷேகம்” என மகிழ்கின்றது, நன்றி
தடை பல கடந்து, பல காலம் காத்திருந்து ராமன் பட்டாபிஷேகம் முடிந்தபின்புதான் நாடு செழித்தது என்கின்றது புராணம்
அப்படி இனி தமிழகமும் செழிக்கும் என குறிப்பால் சொன்ன தினமலருக்கு வாழ்த்துக்க
ள்
பதவிக்காக எனது கையை பிடித்து கெஞ்சியவர் எடப்பாடி பழனிசாமி- டிடிவி தினகரன் கடும் தாக்கு
சசிகலா போயஸ் கார்டனில் எப்படி கெஞ்சிகொண்டிருந்தார் என எடப்பாடி கேட்டால் தினகரன் என்ன பதில் சொல்வாரோ தெரியாது
இப்படியே கெஞ்சிய மூலங்களுக்கு சென்றால் கலைஞரிடம் பதவி வேண்டி கெஞ்சிய ராமசந்திரன் வரை விஷயம் செல்லும்
சசிகலா “தியாக தலைவி”, தினகரன் “திராவிட செல்வன்” ஆகிவிட்ட தமிழகத்தில், திருமுருகன் காந்தி “இரண்டாம் பெரியார்” ஆனதில் என்ன ஆச்சரியம்?