அமிர்தலிங்கம் யாரென தும்பிகளிடம் கேளுங்கள்?
ஏன் அமிர்தவிங்கம் கதையினை சொன்னாய் என பல கேள்விகள்
அமிர்தலிங்கமும் ஈழமும் பிரிக்க முடியாதது, முதலில் தமிழகத்திடம் ஆதரவு கேட்டுவந்தவர் அவரே
அவரையும் சந்திரஹாசனையும் நம்பியே, இவர்களை மீறி போராளிகள் செல்லமாட்டார்கள் என நம்பியே இந்தியா அவர்களுக்கு பயிற்சியும் அடைக்கலமும் அளித்தது
(புலிகள் அவர்களையும் கொன்று, இந்தியாவினையும் பகைத்து எல்லாம் நாசமாக்கினர்)
கலைஞருக்கும் அவர்மேல் பெரும் மரியாதை இருந்தது, என்று அமிர்தலிங்கம் கொல்லபட்டாரோ அன்றே கலைஞர் புலிகளை கை கழுவினார்
2009ல் சட்டமன்றத்தில் ஈழசிக்கல் குறித்து உருக்கமாக பேசிவிட்டு அருகில் இருந்த கண்ணப்பனை பார்த்து சொன்னார்
“என்னை போல் இளகிய மனம் படைத்தவர் நீங்கள், நீங்களே சொல்லுங்கள் அமிர்தலிங்கம் கொல்லபட வேண்டியவரா?
அதுவும் அவர் மனைவி கையாலே தேநீர் குடித்துவிட்டு அவரை கொன்றதை எல்லாம் ஏற்க முடியுமா?”
அந்த கேள்வி சாதாரண கேள்வி அல்ல, என்று அமிர்தலிங்கத்தினை புலிகள் கொன்றனரோ அன்றே நான் விலகிவிட்டேன் என்ற பதில் அது
கலைஞர் அவர்மேல் வைத்திருந்த அபிமானம் அப்படிபட்டது
தன் மீதான விமர்சனங்களுக்கு அவ்வப்போது கலைஞர் பதில் கொடுத்துகொண்டேதான் இருந்தார், ஆனால் உணரத்தான் யாருமில்லை
அமிர்தலிங்கம் யாரென தும்பிகளிடம் கேளுங்கள்?
“மூனை தொட்டது யாரு, கொய்யால இந்த அமிர்தலிங்கம்டா..” என ஒருவர் சினிமாவில் வருவாரே? அவரா என சிரிக்காமல் கேட்பார்கள்