மு.க.அழகிரி திடீர் மிரட்டல்
தி.மு.க.வில் சேர்க்க மறுத்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்- மு.க.அழகிரி திடீர் மிரட்டல்
தமிழகத்திலே, ஏன் உலகிலே என்னை கட்சியில் சேர்க்காவிட்டால்.. என மிரட்டும் ஒரே நபர் அழகிரியாகத்தான் இருப்பார்
வரலாற்று வினோதம் இது
மிரட்டுபவர் கலைஞர் இருக்கும்பொழுது மிரட்டி இருக்கலாம், அப்பொழுதெல்லாம் எங்கே இட்லி சுட்டுகொண்டிருந்தார் என தெரியவில்லை
அழகிரி ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும், அது அவருக்கு நல்லது
சம்பத் பெரும் எண்ணிக்கையில் வெளியேறினார் திமுக நிலைத்தது
ராமசந்திரன் மாலிக்காபூர் கையில் சிக்கிய மதுரையாக கட்சியினை சூறையாடினார், அது மீண்டது
வைகோ பிரித்து பார்த்தார், திமுக அசரவில்லை
இப்படியாக பெரும் திமிங்கலங்களின் பிரிவினையே சாதாரணமாக கடந்து சென்ற கட்சி அது
கட்சியில் உள்ள பெருந்தலைகள் கலைத்தே கலங்காத கட்சி, கட்சிக்கு வெளியில் இருந்து கத்துபவர்களால் சலசலக்காது
ஒருவேளை எதிர்கொடி ஏந்தி ஊரெல்லாம் சுற்றிவிட்டு திரும்பி வந்தால் அழகிரி நிலமை எப்படி இருக்கும்?
வைகோ போலத்தான் இருக்கும், மிகபெரும் அவமானம் அது
அந்த அவமானத்தை தவிர்க்க அவர் இப்பொழுதே அமைதியாவது நல்லது, மாறாக அவமானபட்டே தீரவேண்டும் என விதி இருந்தால் அதை யார் மாற்ற முடியும்?