தமிழ் சமூகத்தை வைரமுத்து என்னதான் சொன்னார் சொல்லிவிட்டார்
“வேட்டி கட்டிய விலங்குகளாகத் திரிந்த ஒடுக்கப்பட்ட மக்கள்” என முன்பு வாழ்ந்த தமிழ் சமூகத்தை வைரமுத்து சொல்லிவிட்டாராம்
உடனே டேய் எம் சாதி விலங்கா? என பலர் கொந்தளிக்கின்றார்கள்
சூத்திரன் என வைக்கபட்ட பிரிவில் இன்றைய ஆண்ட சாதி என சொல்லிகொள்பவர்களும் , இன்று ஒடுக்கபட்டோர் என சொல்லி கொள்பவர்கள் எல்லோருமே அடக்கம்
இன்னொன்று சட்டை அணிவது தமிழர் வழக்கம் அல்ல, அது பிற்காலத்தில் வந்தது, வேட்டி அணிந்து மாரில் சந்தணம் பூசி நகைகள் அணிந்து திரிவது இங்குள்ள பாணியாக இருந்திருக்கின்றது
பின்னாளில் மாறிற்று
ஆடை என்பது அந்தஸ்தை காட்டுவது போல் இப்படி இருந்தது
உயர் சாதி வேட்டியும் மேலோரு வஸ்திரமும் தலைப்பாகையும் அணிவர்
அடுத்த வகை வேட்டியும் மேலோரு வஸ்திரமும் அணியும்
இன்னொரு வகை அதாவது உழைக்கும் கூட்டம் வேட்டி மட்டுமே அணியும்
இது பெரும்பாலும் ராணுவம், வயல்வெளி, என உழைத்த இனம். இவர்களுக்கு பெரும் உரிமை எல்லாம் இல்லை
கிட்டதட்ட அடிமைகள் போலவே நடத்தபட்டார்கள், வைரமுத்து இதனைத்தான் சொன்னார்
ஒரு சாதியினை குறிப்பிட்டு சொல்லவில்லை
அதற்கும் வைரமுத்து மேல் பொங்குகின்றார்கள், இதே வைரமுத்துதான் பல பாடல்களில் சாதிகொடுமையினை பொங்கி எழுதினார்
வேதம் புதிது முதல் பெரியார் படம் வரை சாதிக்கு எதிரான பல அவரின் பாடல்கள் உண்டு
அப்பொழுதெல்லாம் மரத்தடியில் மல்லாக்க கிடந்தவர்கள் இப்பொழுது பொங்குகின்றார்கள்
இங்கு சிறுத்தைகள் இருக்கலாம், சிங்கங்கள் இருக்கலாம், புலிகள் இருக்கலாம் அப்படி விலங்குகள் பெயரில் பல இருக்கலாம் , கட்சியே இருக்கலாம்
ஆனால் வைரமுத்து பொதுவாக சொல்லிவிட்டால் தவறாம்
விடுதலை சிறுத்தை என்பதும், புலிபடம் போட்டு பாய்வதும், சிங்கம் படம் போட்டு எங்க சாதிலே என உறுமுவதும் என்ன வகை?
அதைவிட வைரமுத்து ஒன்றும் மோசமாக சொல்லவில்லை, பொதுவாகத்தான் சொன்னார்