தந்தைக்கு பின்னர் பதவி மகனுக்கு
பெரியார் சுயம்பாக உருவானார், பெரியாரின் அரவணைப்பு இல்லாவிட்டாலும் தன்னால் பெரும் இடம் பெற முடியும் என நிரூபித்தார் அண்ணா
அண்ணாவிற்கு பின்னரான போட்டியில் பெரும் ஜாம்பவான்களை சரித்து காட்டி முதலிடம் பெற்றார் கலைஞர்
கொள்கையோ, கோட்பாடோ இல்லாவிட்டாலும் தன்னாலும் அரசியலில் வெல்லமுடியும் என காட்டியவர் ராமசந்திரன்
அரசியலுக்கு வந்த சில ஆண்டுகளிலே அதிரடியாக கட்சியினை கைபற்றி தலைவி என அமர்ந்தவர் ஜெயா
குறிப்பிட தகுந்த வெற்றிகள் என்பது இதுதான், சாதனை என்பதும் இதுதான்
தந்தைக்கு பின்னர் பதவி மகனுக்கு என்பது காங்கிரஸ் பாரம்பரியம், அதுதான் வழிகாட்டி
இதில் வெற்றி வெற்றி என முழங்க ஒன்றுமில்லை, இதிலும் ஸ்டாலின் வராமல் இருந்தால்தான் ஆச்சரியம்.
காங்கிரஸ் சுருங்கி போனதற்கு இதுவும் ஒரு காரணம்
அண்ணா இல்லாவிட்டாலும் கலைஞர் எழும்பி இருப்பார், அவரின் ஆற்றலும் செயலும் அப்படி
ஆனால் கலைஞர் இல்லாவிட்டால் ஸ்டாலின் இந்த உயரம் வரமுடியுமா என யோசிப்பவர்கள் அதிகம் பேசமாட்டார்கள்.
பாபர் எங்கிருந்தோ வந்து மன்னரானதற்கும், ஷாஜகான் சுகமாக வந்து பதவியில் அமர்ந்ததற்கும் வித்தியாசம் உண்டு
ராஜபக்சவுக்கு ‘பாரத ரத்னா’ வழங்க வேண்டும்: சுப்பிரமணிய சுவாமி
24 மணி நேரமும் தமிழக கட்சிகளுடன் வம்பு இழுப்பது எப்படி என சிந்திக்கும் ஒரே நபர் சுவாமிதான்
திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்துக்கு ரூ.1.34 கோடி – தமிழக அரசு
ஆதித்தனார் குடும்பத்திடம் அரைகாசு கூட இல்லா நிலை இருப்பதால் அரசு மக்கள் பணத்தை செலவழித்தே ஆக வேண்டும்
முக ஸ்டாலினுக்கு குஷ்பு வாழ்த்து சொல்லியிருக்கின்றார், அது பல பத்திரிகைகளில் செய்தியாக வர ஆரம்பித்தாயிற்று
சங்கம் விடுத்த கோரிக்கையினை ஏற்ற பத்திரிகை உலகத்திற்கு கோட்டான கோடி நன்றி
தலைவிக்கு பத்திரிகை உலகம் தொடர்ந்து ஆதரவினை வழங்கட்டும்
தமிழக சமூக நீதிக்கு ஆபத்து : டாக்டர் ராமதாஸ்
“சமூக நீதின்னா என்ன டாடி?
வன்னியன் மட்டும் வாழ்றது , நீயும் நானும் ஆள்றதுடா மவனே”