பேதை செங்கொடிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
ஒரு படத்தில் நாகேஷ் குனிந்து நிற்பார், அவர் யார் முன்னால் குனிந்து நிற்பாரோ அந்த பணக்காரர் கேட்பார், என்னப்பா இப்படி குனியிறே
நாகேஷ் சொல்வார் “இன்னும் குனிவேன், தரை தடுக்குதே”
இந்த அங்கிள் சைமன் கும்பல் எப்படிபட்டது என்றால் சாட்சாத் அந்த நாகேஷ் காட்சியினை விட காமெடியாக தரையில் குழிதோண்டி குனியும் கும்பல்
இதோ பாருங்கள், செங்கொடிக்கு அஞ்சலியாம். அவர்கள் கட்சியே யாருக்காவது அஞ்சலி செலுத்துவது அதன் படி செய்கின்றார்கள்
ஆனால் செங்கொடி எதற்காக செத்தாள்
ராஜிவ் கொலையில் சிக்கியுள்ள 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என சொல்லி தீகுளித்து செத்தாள் அந்த அபலை, அவளை அந்த அளவு மூளைசலவை செய்திருக்கின்றார்கள்
7 பேரும் வெளிவந்தார்களா? இல்லை,இனி வரப்போவதுமில்லை
இப்பொழுது எந்த போராட்டம் செய்தாலும் வழக்கு , பிடி என அரசு கடும் முகம் காட்டுவதால் இந்த கோஷ்டிகள் செங்கொடிக்கு அஞ்சலி என கிளம்பிவிட்டன
நன்றாக பாருங்கள்
எங்காவது செங்கொடி எதற்காக செத்தாள் என ஒருவார்த்தை இருக்கின்றதா?
அவள் கனவுபடி 7 பேரும் விடுதலை செய்யபடவேண்டும் என்ற கோரிக்கை இருக்கின்றதா?
இல்லை, காரணம் அப்படி இருந்தால் சிக்கல்
இதனால் அந்த செங்கொடி என்பவள் ஏதோ தில்லையாடி வள்ளியம்மை போலவும், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி போல பெண் உரிமைக்காக செத்தவள் போலவும் ஆரம்பித்துவிட்டார்கள்
உண்மையில் செங்கொடியின் சாவு கொடூரமானது, ஆனால் அவளின் தியாகத்தை இந்த கும்பல் இப்படி மறைப்பது இன்னும் மகா கொடூரமானது
செங்கொடி தியாகத்திற்கு 7 பேரை விடுதலை செய் என கேட்கமுடியாதவர்கள் என்னவெல்லாமோ சொல்லி மழுப்புகின்றார்கள், கிராதகர்கள்
இவர்களின் பச்சை பொய்களை நம்பி, நடக்கவே முடியாத விஷயத்திற்கு தன் உயிரை கொடுத்த அந்த பேதை செங்கொடிக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்
இந்த கும்பல் எவ்வளவு ஆபத்தானது , எப்படி எல்லாம் பல்டி அடிக்கும் என்பதை தமிழர் உணர்ந்து கொள்ள மிக அரிய வாய்ப்பு இது
இருந்து பாருங்கள், விரைவில் பிரபாகரன் பிஜூ தீவில் போராடினான் என சொல்வார்கள். அக்காலம் மிக அருகிலே இருக்கின்றது