திராவிட சர்ச்சில் , ராஜதந்திரி என கிளம்பி விட்டார்கள்

Image may contain: 1 person, smiling

தலைவர் கருணாநிதியை மிஞ்சும் சாதனை தலைவனாக ஸ்டாலின் திகழ வேண்டும் – கி.வீரமணி

அன்னார் பெரியாரை மிஞ்சி பல சாதனைகளை செய்தவர் என்பது குறிப்பிடதக்கது


அண்ணாவினை தென்னாட்டு பெர்னாட்ஷா என்றவர்கள், ஒரு காலத்தில் கலைஞரை தமிழ்நாட்டு ஷேக்ஸ்பியர் என்றவர்கள் இப்பொழுது ஸ்டாலினை மட்டும் விடுவார்களா?

இதோ திராவிட சர்ச்சில் , ராஜதந்திரி என கிளம்பிவிட்டார்கள்.

புரட்சி தலைவன் லெனினை பார்த்துவிட்ட பின்பும் ராமசந்திரனை புரட்சி தலைவர் என சிரிக்காமல் சொன்ன தமிழகம் இது, இப்படித்தான் இருக்கும்

சர்ச்சில் ராஜதந்திரி என்பதில் சந்தேகம் இருக்கலாமே தவிர மனிதர் சவுடால் பேர்வழி என்பதில் சந்தேகமே இல்லை

உண்மையில் இரண்டாம் உலகப்போரில் என்ன நடந்தது?

இந்த ஹிட்லரை ஆரம்பத்திலே முடித்திருக்க முடியுமா என்றால் முடிந்திருக்கும், சர்வதேச சங்க விதிகளை அவன் மீறும்பொழுதே சனியனை தொலைத்திருக்கலாம்

ஆனால் ஏன் விட்டு வைத்தார்கள் என்றால் அதுதான் அரசியல்

ஆம் ஹிட்லருக்கு யூதர்கள், இந்த மார்டன் ஓவியர்கள், மனுஷ் போன்ற இம்சை கவிஞர்கள், ஓரின சேர்க்கை கும்பல், முற்போக்கு அழிச்சாட்டியம் எல்லாம் சுத்தமாக பிடிக்காது

Image may contain: 1 personஅப்படியே கம்யூனிஸ்டுகளையும் அறவே பிடிக்காது, ரஷ்ய புரட்சி என்பது யூதர்களின் ரகசிய வேலை, மன்னராட்சியினை ஒழித்தால் மற்ற இனத்தாருக்கான பாதுகாப்பு அகலும், குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பார்கள் யூதர்கள் என மனமார நம்பினான்

அவனின் கொலை கூடங்கள் யூதருக்கு அடுத்து கம்யூனிஸ்டுகள் என குறித்து வைத்திருந்தன‌

முதலாளித்துவ ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா எல்லாம் ரஷிய கம்யூனிஸ்டுகளை வெறுத்த காலத்தில்தான் அவர்களுக்கு ஹிட்லர் கிடைத்தான்

தொடக்கத்தில் அமெரிக்காவும் ஹிட்லருக்கு ஆயுதம் கொடுத்த நாடுதான்

இது தெரிந்து ரஷ்யாவும் ஜெர்மனும் சில ஒப்பந்தம் செய்து அமைதியாயின, ஆனாலும் இருவரும் சந்தேகத்தோட இருந்தார்கள்

ஹிட்லர் ஐரோப்பாவினை ஆட்ட தொடங்கியதும் கொஞ்சம் அதிர்ந்த ஐரோப்பியர் அவனை ரஷ்யாவுடன் மோதவிட முயன்றனர்

இதற்கு முதல் காரணம் சர்ச்சில் அவர்தான் ஜெர்மன் புலி ரஷ்ய கரடியினை சும்மா விடாது என கொழுத்திபோட்டார்

ஹிட்லருக்கு எண்ணெய் தேவை இருந்தது, கூடவே கம்யூனிஸ்டுகளை ஒழிக்கும் அவசியமும் இருந்தது, சர்ச்சில் இதை குறித்து தூண்டிவிட்டார்

ஹிட்லர் நினைத்திருந்தால் பிரிட்டனை பிடித்துவிட்டு ரஷ்ய பக்கம் சென்றிருக்கலாம், அவனோ பிரிட்டன் கோழிகுஞ்சு என்பசிக்கு யானை ரஷ்யாதான் வேண்டும் என அங்கு கால் வைத்தான்

நிச்சயம் சர்ச்சிலின் தந்திரம் பாராட்டபட்டாலும், இது முதலில் இருந்தே ஐரோப்பியரால் தீட்டபட்ட திட்டமே

சோவியத் ரஷ்யாவினை ஜெர்மனி கொண்டு ஒழிக்கும் திட்டம்

ஹிட்லர் முதலில் வெற்றிமுகம் காட்ட ஐரோப்பா மகிழ்ந்தது, இனி ஹிட்லர் ஆசியா எங்கும் ஆள்வார் என பெர்ஷியா அவசரமாக தன்னை ஆரியபூமி எனும் ஈரான் என்றது, இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ் கொடி பறந்து இதுவும் ஆரிய பூமி என சொல்லிகொண்டது, ஹிட்லரை அப்படி ரகசியமாக வரவேற்றார்கள்

ஆனால் ஸ்டாலின் (முக ஸ்டாலின் அல்ல ரஷ்ய ஸ்டாலின்) அடித்த அடியில் ஜெர்மன் சிதறியது, தன்னை தூண்டிவிட்ட பிரிட்டனை பழிதீர்க்க அதை சரணடைய சொன்னான் ஹிட்லர்

சர்ச்சிலோ பல்வீனமான ஹிட்லரை பார்த்து ஆககூடியதை பார் என சவால்விட்டார், ஆனால் ரகசியமாக கனடா செல்ல திட்டமிட்டார்

ஹிட்லரின் நவீன வி2 ராக்கெட்டுகள் தாக்கியும் லண்டன் பெரும் சேதமுற்றும் சர்ச்சில் வாய் வீச்சுக்களை குறைக்கவே இல்லை

அவர் பேசி பேசி காலம் கடத்த ரஷ்ய படைகள் ஜெர்மனியில் புகுந்து ஹிட்லர் கதையினை முடித்தன‌

அடுத்த தேர்தலில் சர்ச்சில் தோற்றும் போனார்

இதுதான் சர்ச்சில் கதை, அதாவது அடுத்த தேர்தலிலே கடும் தோல்வியுற்றார் சர்ச்சில். இவரை போருக்காக பொறுத்தோம் அத்தோடு ஒழியட்டும் என விரட்டினர் இங்கிலாந்து மக்கள்

இதுதான் சர்ச்சிலின் ராஜதந்திர கதை

ரஷ்ய ஸ்டாலின் கலைஞருக்கு மிக பிடித்தமான தலைவன், காரணம் செருப்பு தைக்கும் தொழிலாளியாக இருந்து ரஷ்ய தலைவனாக உயர்ந்து, ஹிட்லரை வீழ்த்தியவன்

அதனால் தன் மகனுக்கு ஸ்டாலின் என பெயரிட்டார்

ஏன் சர்ச்சில் என அவருக்கு பெயரிட தெரியாதா? ஆனால் செய்ய்வில்லை ஏன்?

ஜோசப் ஸ்டாலினின் அழிவினை விரும்பியவர் சர்ச்சில் என்பதால் அவரை உலக புரட்சி சிந்தனை உள்ளவர்கள், பொதுவுடமைவாதிகள் என யாருக்கும் பிடிக்காது

அந்த சர்ச்சிலைத்தான், தேர்தலில் தோற்றுபோன சர்ச்சிலைத்தான் பெரும் ஞானியாக நினைத்து ஸ்டாலினை தென்னாட்டு சர்ச்சில் என சில விசிலடிச்சான் குஞ்சுகள் சொல்லிகொண்டிருக்கின்றன‌

கலைஞரின் ஆவி கண்ணீர் வடிக்கும் நேரமிது, ஸ்டாலின் எனும் மாவீரனின் பெயரை கொண்டவர் சர்ச்சில் ஆக முடியுமா?

இதில் ஸ்டாலினுக்கு இன்னொரு பெரும் சவாலும் இருக்கின்றது, விக்டரி என பொருள்படும்படி போர் காலங்களில் இரட்டை விரலை காட்டி மக்களை உற்சாகபடுத்தினார் சர்ச்சில்

அந்த இரட்டை விரலை பின்பு வசமாக பிடித்து கொண்டார் தமிழக ராமசந்திரன்

இப்பொழுது உபிக்கள் ஸ்டாலின் தமிழக சர்ச்சில் என கிளம்பினால் ஸ்டாலின் இரட்டை விரலை காட்ட முடியுமா? ஜெயக்குமார் வாய்விட்டு சிரிக்க மாட்டாரா?

இதற்காக‌ ஸ்டாலின் ஒரே ஒருவிரலையா காட்ட முடியும்? பார்க்க நன்றாய் இராது

இந்த உபிக்களை அருகில் வைத்து கொள்வதை விட ஸ்டாலின் சில தும்பிகளை பக்கத்தில் வைத்துகொள்ளலாம்