உடன்பிறப்புக்களின் பகுத்தறிவு இம்சை தாளவில்லை
இந்த உபிக்களின் பகுத்தறிவு இம்சை தாளவில்லை என்றால், இப்பொழுது தமிழ் அறிஞர்களாகவும் ஆகிவிட்டார்கள்
அதாவது ஆரத்தி என்பது தமிழ் இல்லையாம் சமஸ்கிருதமாம், எந்த புத்தகத்தில் படித்தார்கள் என்றால் தெரியவில்லை
காஞ்சியா? ஈரோடா? திருகுவளையா? எந்த புத்தகத்தில் அப்படி இருந்தது?
ஆரம் என்பது தமிழ்ச்சொல், அதற்கு வட்டம் என பொருள். அந்த சூடத்து தீயினை வட்ட வடிவமாக சுற்றுவார்கள்
சூட்சுமமாக முகத்தை சுற்றி நிற்கும் சக்திகள் அதில் எரியும் என்பது அக்கால நம்பிக்கை, அது இன்றும் தொடர்கின்றது
வட்டம் தீ, தீ வட்டம் என்பது ஆரத்தீ ஆயிற்று
கடவுளுக்கு சூட்டும் மாலையினை கூட ஆரம் என்பது தமிழ்மரபு
இது கூட தெரியாமல்தான் தமிழையும் பகுத்தறிவினையும் வளர்க்கின்றார்களாம்
கலைஞர் இந்தியினை எதிர்க்க தன் கட்சியினருக்கு சொன்னாரே தவிர நல்ல தமிழ்படிக்க சொல்லவே இல்லை போலிருக்கின்றது
இப்பொழுதுதான் அழகிரி பின்னால் பாஜக இருக்குமோ என்ற பலத்த சந்தேகம் வருகின்றது
காரணம் தமிழக பாஜக மேடைகளும் இப்படித்தான் இருக்கும்