மோடியின் அரசு நாட்டு பொருளாதாரத்தை சரித்ததா?

மோடியின் அரசு நாட்டு பொருளாதாரத்தை சரித்ததா, கறுப்பு பண ஒழிப்பு தோல்வியா என ஏகபட்ட கருத்துக்கள்

உண்மையில் நடந்தது என்ன என்பதை நிபுணர்கள் இப்படித்தான் சொல்கின்றார்கள், நடந்தது இதுதான்

இந்தியா வளரும் நாடு, பெட்ரோல் போன்ற வளங்களோ தொழில்துறை ஏற்றுமதியோ இன்னபிற வருமானமோ பெருமளவில் இல்லை

அந்நிய முதலீடும் இன்னபிற சங்கதிகளுமே நாட்டை தாங்கிகொண்டிருந்தன, அதுவும் 1990க்கு பின் தாராளமயமாக்கலில் நாடு நாலுகால் பாய்ச்சலில் மாறியது

உண்மையில் 2008 பொருளாதார மந்தம், பெட்ரோல் விலை எகிறல் போன்ற காலங்களில் மன்மோகன்சிங் இந்த நாட்டை காத்தார், அந்நிய முதலீட்டாளர்களுக்கும் அச்சமில்லாமல் இருந்தது

மோடி வந்ததிலிருந்து உலக நாடுகளின் இந்திய அபிமானம் மாறியது, இவர்கள் காட்டிய பிம்பம் அப்படி, இது ஒருமாதிரியான கோஷ்டி, இந்த மதவிவகாரம் போன்றவற்றை கிளப்பினால் எங்கிருந்து தொழில் நடக்கும் என வெளிநாட்டு நிறுவணங்கள் எல்லாம் தயங்கின‌

அதை நம்ப வைப்பது போல் மாட்டுகறி முதல் ஏக சிக்கலும் வந்தது, உலக நாடுகளின் நம்பிக்கைகுரிய நாடாக மோடி அரசு இருக்கவில்லை

மோடியும் உலகெல்லாம் ஓடித்தான் பார்த்தார், அவர் நினைத்த‌
பலனை அடைய முடியவில்லை, இந்திய பொருளாதாரம் சரிந்தது

சரியும் பொருளாதாரத்தின்படி 2000ரூபாய் நோட்டு அடிக்கபட்டிருக்க வேண்டும், கரன்சியில் நம்பர் கூட கூட நாடு நாசமாகின்றது என்பது பொருள்

சும்மா 2000 நோட்டு அடிக்க முடியுமா? இதனால் கறுப்பு பணத்தை ஒழிக்க போகின்றோம் என நாடகம் ஆடினார்கள். அதன் உண்மையான பொருள் 2000 நோட்டினை கொண்டுவருவது

ஆயிரம் ரூபாயினை பதுக்குகின்றார்கள் அதனால் 2 ஆயிரம் ரூபாய் என சொல்லும்பொழுது உலகம் சிரிக்கத்தான் செய்தது, உண்மையில் பொருளாதாரம் சரிந்தது

இந்த வாஜ்பாய் தேவை இல்லாமல் அணுகுண்டை வெடித்தது போல் மோடியும் கால நேரம் அறியாமல் இந்நாடகம் ஆட பொருளாதாரம் சரிந்தது

கச்சா எண்ணெய் விலை கொஞ்சம் கொஞ்சம் உயர உயர அது வெளிதெரிந்தது, இன்று இந்திய வரலாற்றில் இல்லாத அளவு டாலருக்கு எதிராக குப்புற கிடக்கின்றது ரூபாய்

நிச்சயம் சொல்லலாம் இந்த அரசின் ஒரு மாதிரி மதவாத பிம்பமும் அவர்கள் காட்டிய சிலவகையான விவகாரங்களும் சிக்கலின் முதல்படி

அருண்ஜெட்லி தவிர உருப்படியான முகங்கள் எதுவும் இல்லாத குழப்பமான மந்திரி சபை இரண்டாம் படி

இன்னும் நாட்டின் உண்மையான நிலைக்கும் இவர்கள் செய்த வாய்வழி சவுடால்களுக்கும் ஏகபட்ட இடைவெளிகள்

சில விவகாரங்கள் உண்மைதான், நாட்டின் பொருளாதாரம் சரிவதை திசைமாற்ற ரூபாய் நோட்டு ஒழிப்பு என நாடகம் ஆடியது இன்னும் நிலமையினை மோசமாக்கிற்று

புதிய இந்தியா ஒன்றும் பிறக்கவில்லை , பிறந்த இந்தியா நோயாளியாக படுக்கையில் தள்ளபட்டது

மோடி அரசு நிதிகொள்கையில் தடுமாறி நாட்டை தள்ளாட வைத்துவிட்டது என்பதை ஏற்றுகொள்ளத்தான் வேண்டும்

இனி புதிய அரசு அமைந்தாலும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயினை உயர்த்தி , இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவது நிச்சயம் சவால்

மறுபடி இவர்களே வந்துவிட்டால் என்னாகும்? இந்திய கரன்சி 3 ஆயிரம், 5 ஆயிரம் என உயர்ந்துகொண்டே இருக்கும்

ஒரு கட்டத்தில் இந்தோனேஷுயா, ஜிம்பாப்வே போல மில்லியன் நோட்டு அடிக்கும் காலமும் வரலாம்