ஆசிய விளையாட்டு போட்டி 2018: வங்கம் தந்த‌ தங்கமாகிவிட்டார் ஸ்வப்னா

No automatic alt text available.

ஆசிய விளையாட்டு போட்டிகள் நாளையோடு முடிகின்றன, இந்தியா 8ம் இடத்தில் இருகின்றது

இந்த போட்டியில் அகில உலகம் கவனம் பெற்றிருப்பவர் இந்தியாவின் ஸ்வப்னா பர்மன், ஏழை குடும்பத்தில் இருந்து தன் திறமையால் முன்னேறி இன்று பெற்றிருக்கும் தங்க பதக்கம் அவரை கவனிக்க செய்கின்றது

வங்கம் தந்த‌ தங்கமாகிவிட்டார் ஸ்வப்னா

ஹெப்டத்லான் என்பது கடுமையான போட்டி, 7 போட்டிகளை கொண்டது

ஹெப்டா என்றால் கிரேக்க மொழியில் 7 என பொருள் , நூறு மீட்டர் தடை தாண்டும் பொட்டி, உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், 200 மீட்டர் ஓட்டம், 800 மீட்டர் ஓட்டம் மற்றும் ஈட்டி எறிதல்

ஆக 7 விளையாட்டுகளில் பயிற்சி இருக்க வேண்டும், 7 பேர் தனி தனியாக திறமை காட்டுவதை ஒரே ஆளாக காட்ட வேண்டும்

எவ்வளவு கடுமையான விளையாட்டு, நிச்சயம் இது விளையாட்டு வகையிலே சேர்க்க கூடாது, முயற்சி என்ற வகையில் வரலாம்

ஆனால் கிரேக்கர்கள் அன்றே ஆடி விளையாட்டு வரிசையில் சேர்த்துவிட்டார்கள்

அந்த கடுமையான போட்டியில் சீன, ஜப்பானிய வீராங்கனைகளை பின்னுக்கு தள்ளி தங்கம் வென்று அசத்திவிட்டார் ஸ்வப்னா

சந்தேகமில்லை இது மகா சிறப்பான வரலாற்று வெற்றி, மிக கடுமையான போட்டியில் அவர் தங்கம் வென்றிருப்பது மாபெரும் சாதனை

இந்திய விளையாட்டு உலகம் அவரை வாழ்த்துகின்றது

உலக தடகள நிபுணர்கள் அவளுக்கு கைதட்டுகின்றனர், ஜப்பான் ஒலிம்பிற்கு தயாராகும் வலுவான அணிகள் அவளை குறித்து வைத்திருக்கின்றன‌

இந்தியாவின் அந்த களைப்படையாத எந்திர மகளுக்கு வாழ்த்துக்கள்

நிச்சயம் பெரும் பரிசுகளும், கடும் ஊக்கமும் அவளுக்கு தேவை, அப்படி செய்யும் பட்சத்தில் ஓலிம்பிக்கில் ஒரு தங்கத்தை உறுதி செய்யலாம்

அது இத்தேசத்தின் கடமையும் கூட‌

ஆசிய விளையாட்டில் இந்தியாவினை 8ம் இடத்தில் நிறுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள். தங்க மகள் ஸ்வப்னாவிற்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்

தேசம் உன்னால் பெருமை அடைவதாலும், இந்திய பெண்கள் அகில உலகில் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை, எந்த கடும் போட்டிக்கும் தயார் என உலகிற்கு சொன்ன ஸ்வப்னாவிற்கு பாராட்டுக்கள்

சாதித்த அந்த பெண்ணுக்கு அகில உலக சாதனையாளர் குஷ்புவின் சங்கமும் நல்வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது

சீன, ஜப்பானிய பெண்களை விரட்டியது போலவே ஜப்பான் ஒலிம்பிக்கிலும் ஸ்வப்னா தங்கத்தோடு வர அட்வான்ஸ் வாழ்த்துக்கள்