டிஜிஎஸ் தினகரனும், கி.வீரமணியும் வகுப்பு தோழர்கள் என்கின்றது செய்தி

வட பழனி என்பது பாவத்தின் இடமாம், விபச்சாரம் எல்லாம் நடக்கின்றதாம், அதனை தடுக்க கர்த்தராகிய இயேசு கிறிஸ்து ஒருவரிடம் வந்து “ஏ வேலை வெட்டி இல்லாதவனே , உனக்கோர் வேலை தருகின்றேன் அங்கே சர்ச்சை கட்டி பாவத்தை தடுப்பாயாக” என சொல்லிவிட்டாராம்

ஆனால் சர்ச் கட்ட சொன்ன‌ பணத்தினை கர்த்தர் கொடுக்கவில்லை என்பதால் அதை மக்களிடமே பிரிக்க இவர் வீடியோ வெளியிட்டுள்ளார்

இது நிச்சயம் கண்டிக்கதக்க ஒன்று, முடிந்தால் அவரை பிடித்து மனநலமருத்துவ மனையில் சேர்க்க வேண்டும் இல்லை கதற கதற பைபிள் கற்றுகொடுக்க வேண்டும்

விபச்சார குற்றம் என்பது இயேசு முன்னாலே வைக்கபட்டது, விபச்சாரத்திற்கு கல் எறிந்து கொல்லுதல் என்பதுதான் யூத சட்டம்

இயேசு அப்படிபட்ட பெண் பிடிபட்டபொழுது ஒரு கல் அவள் மேல் விழாமல் காப்பாற்றி, இனி பாவம் செய்யாதே என சொல்லி அனுப்பினார்

விபச்சார பாவிகள் என அச்சமூகம் ஒதுக்கி வைத்த பெண்களில் பலர் அவருக்கு மனம் மாறி சீடர்களாயினர்

இயேசு யாரையும் பாவிகள் என ஒதுக்கவில்லை மாறாக போதித்தார், மனம் திருப்பினார்

இது தெரியாமல் இந்த போலி பாஸ்டர் வாயில் வந்ததை எல்லாம் வாந்தி எடுக்கின்றான், அயோக்கிய பயல்

இவர் நல்ல கிறிஸ்தவனாக இருந்தால் என்ன செய்ய வேண்டும்?

அந்த பாவிகளிடம் சென்று பழகலாம், கிறிஸ்துவினை எடுத்துரைக்கலாம், அவர்களிடமே நன்கொடை பெற்று சர்ச் அமைக்கலாம்

அவர்கள் மனம் திரும்பினால் திரும்பட்டும், இல்லை செவிட்டில் அடித்தால் வாங்கி கொண்டு அவர்களுக்கு ஆசி சொல்லிவிட்டு திரும்பலாம்

கிறிஸ்தவம் அதைத்தான் போதிக்கின்றது, பாவிகளை திருத்த பார் என சொல்கின்றதே தவிர அவர்களை ஒதுக்கி வைக்காதே, கேவலபடுத்தாதே எனும் தத்துவத்தை அது போதிக்கின்றது

இவருக்கு கிறிஸ்துவும் தெரியாது, கிறிஸ்தவமும் புரியாது ஆனால் ஆசை மட்டும் வடபழனியில் பல கோடி மதிப்பில் கட்ட‌டம் கட்ட வேண்டும் என்பது

இதற்கு பாவம் என சொல்லபட்ட விஷயங்கள் எல்லாம் முதலீடு என கணக்கு போட்டுவிட்டார் மனிதர்

இவர் யூதாஸை விட, கிறிஸ்துவினை சிலுவையில் அறைந்த ரோமரை விட மகா மோசமானவர்

கிறிஸ்து பெயரால் சம்பாதிக்கலாம் என வழிகாட்டிய தினகரன் குடும்பமே இவருக்கு முன்னோடி என்பதில் சந்தேகமில்லை

டிஜிஎஸ் தினகரனும், கி.வீரமணியும் வகுப்பு தோழர்கள் என்கின்றது செய்தி, அதாவது எப்படி சுருட்டுவது என்பதை அன்றே அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பகிந்திருக்கலாம்

இருவருமே அள்ளி குவித்துவிட்டார்கள்

ஆக பயிற்சி என்பது அப்படி இருக்க வேண்டும், எல்லோரும் தினகரன் ஆகமுடியாது

இந்த அறைகுறை கிறிஸ்தவ போதகருக்கு பரிதாபங்கள் மற்றும் கண்டனங்கள்

இப்படி அரைகுறையாக எதையாவது உளற வேண்டியது, ஏதும் யாரும் சொன்னால் “அய்யகோ இந்துத்வா, ஆர்.எஸ்.எஸ் கொடுமை..” என குதிக்க வேண்டியது