சிக்கிவிட்டார் ஷோபியா

கனடாவில் ஆராய்ச்சி படிப்பு படிப்பதாக சென்றுவிட்டு அங்கிருந்து பாஜகவினை ஆராய்ந்து அந்த முடிவினை விமானத்தில் அரங்கேற்றி சிக்கிவிட்டார் ஷோபியா

இதற்கு சிலர், அவள் தூத்துகுடிகாரி அந்த துப்பாக்கி சூடு அவளை அவ்வளவு காயபடுத்திற்று என வக்கலாத்து வேறு

அந்த ஸ்டெர்லைட்டை அனுமதித்தது ஜெயலலிதா, அதை தொடர்ந்து அனுமதித்தது கலைஞர், விரிவாக்கம் செய்ய உதவியது பழனிச்சாமி

கலவரம் வெடிக்கும்பொழுது சுட்டது தமிழக காவல்துறை, அதன் அமைச்சர் முதல்வர் பழனிச்சாமி

ஆனால் பாஜகதான் எல்லாவற்றிற்கும் காரணம் என ஷோபனாவின் ஆராய்ச்சி முடிவு தெரிவிப்பதற்கும் அதற்கு சிலர் தூத்துகுடிகாரிடோவ் என முஷ்டி தூக்குவதும் என்ன வகை நியாயமோ?

இங்கு சீரழிவினை செய்தவர்வர்கள் இங்குள்ள கட்சி, அதை தேர்ந்தெடுத்த பரிதாபத்திற்குரியவர்கள் இவர்கள்

ஆனால் பழிபோடுவது மட்டும் பாஜக மேல் என்பது தமிழக திராவிட நீதி

இந்தியாவில் பல மாநிலங்களில் பெரும் பாவங்களை செய்யும் பாஜக, தமிழகத்தில் செய்யாத பாவங்களுக்கு பழிஏற்பது ராமர் செயலாகத்தான் இருக்க முடியும்