அழகிரிக்கும் கூட்டம்
அழகிரிக்கும் கூட்டம் இருந்திருக்கின்றது, ஆக இன்னொரு தினகரன் ரெடி
அன்றே சொன்னான் தலைவன் எம்.ஆர் ராட்ஜா
“என்னடா நாடு இது? ஊருக்கொரு லீடர் , ஆளுக்கொரு கொள்கை, அவனவனுக்கு ஒரு டஜன் பட்டினி பட்டாளம் நான்சென்ஸ்…”
கட்சி அரசியல் தவிர எங்கள் குடும்பத்தில் சிக்கல் இல்லை : அழகிரி
அதாவது திமுக என்பது கலைஞர் குடும்ப சொத்து , அதை முறையாக பிரித்தால் சண்டையே இல்லை என்கின்றார் அழகிரி
—————————————————————————————————————————————–
தமிழர்களின் அடங்கா சினத்தை பாஜக அரசு சந்திக்க வேண்டியதிருக்கும்- முக ஸ்டாலின் எச்சரிக்கை
தமிழரின் சினம் பாஜகவினை என்ன செய்யும்? இங்கே பாஜகவிற்கு 50 எம்.எல்.ஏவும் 20 எம்பியுமா இருக்கின்றார்கள்??
இவர் இதில் எச்சரிக்கை செய்கின்றாராம்
தமிழர்களுக்கு அடங்கா சினம் வருவது இருக்கட்டும், பாஜகவிற்கு தமிழர்மேல் கோபம் வந்தால் என்னாகும்? பழனிசாமி அரசு காக்கபடும் தமிழகம் இன்னும் நாசமாகும்
முக ஸ்டாலின் அதைத்தான் விரும்புகின்றார்..
அழகிரி கூட்டிய அமைதிப்பேரணி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது: பொன்.ராதாகிருஷ்ணன்
அழகிரி பின்னால் பாஜக இருக்கின்றது என்பதை இனியும் மறைக்க முடியும்?
இப்படியா பகிரங்கமாக அழகிரி பின்னால் நாங்கள் இருக்கின்றோம் என ஒப்புகொள்வார்கள்?
உங்களை எல்லாம் வைத்து கொண்டு இங்கு பாஜக ஒரு புல்லை கூட பிடுங்க முடியாது
இதில் உங்களையும் சீரியசாக நம்பி ஒன்று விமானத்தில் நரம்பு புடைக்க கோஷம் போட்டு மாட்டிகொண்டிருக்கின்றது என்பதுதான் பரிதாபம்
ஒழிக கோஷம் போட்டா பாஜக அழியவேண்டும்? பின் எதற்கு பொன்னார் எல்லாம் இருக்கின்றார்கள்?
————————————————————————————————————————————
என்னதான் இந்துத்வா, இந்துமதம் , ஆர்.எஸ்.எஸ் கொள்கை அகண்ட இந்தியா, உருண்ட இந்தியா என பெரும் தத்துவம் பேசினாலும், இஸ்லாமியரின் இந்திய துரோகம் என கண்ணீர்விட்டாலும் மதியம் ஆனவுடன் பூரா பயலும் ஓடிசென்று நிற்கும் இடம் பிரியாணி விற்கும் இஸ்லாமிய பாய் கடை
இந்த ஒற்றுமை இருக்கும் வரை இந்தியாவினை அசைக்க முடியாது, அசைக்கவே முடியாது
இந்த தேசத்தை பிணைத்து நிற்கும் விஷயங்களில் பிரியாணியும் ஒன்று
இந்த கலெக்டர் ரோகினி என்பவரின் பல வகையான டிசைன்களை பார்த்து கொண்டே இருக்கின்றோம்
திடீரென ஆஸ்பத்திரியில் புகுந்து யாருக்காவது அறுவை சிகிச்சை செய்வது, சுடுகாட்டில் வெட்டியானுக்கு பதில் பிணத்தை எரிப்பது தவிர எல்லா மக்கள் பணிகளையும் செய்துவிட்டார்
மேற்கண்ட விஷயங்களையும் செய்துவிட்டால் 100% மக்கள் கலெக்டர் ஆகிவிடுவார்