கருத்து சுதந்திரம்
முதலில் குஷ்பு சொன்ன கருத்துக்காக அவர் வீட்டை தாக்கிய திமுகவினரை மன்னிப்பு கேட்க சொல்லுங்கள் அய்யா
குஷ்புவின் கருத்து சுதந்திரம் நசுக்கபட்டதற்கு முதலில் மன்னிப்பு கேளுங்கள்
சோபியாவின் கருத்து சுதந்திரம் பற்றி பின்னர் பார்க்கலாம்
மிஸ்டர் ஸ்டாலின் இந்த பச்சை மண் முகத்தை பார்த்தால் கல்வீச தோன்றுமா? இல்லை கல்லில் சிலைவடிக்க தோன்றுமா?
ஆனாலும் காட்டுமிராண்டிகளான உம் கட்சிக்காரர்கள் அவர் கருத்துக்காக கல்வீசினார்கள்
ஒரு வார்த்தை திமுகவினரை கண்டித்தீரா? இல்லை தலைவி குஷ்புவிற்கு ஆறுதல் சொன்னீரா?
பிரியாணி கடை எல்லாம் ஓட தெரிந்தவருக்கு , சோபியாவிற்காக கத்துபவருக்கு குஷ்வு வீட்டில் எறிந்த கல் கண்ணுக்கு தெரியாதா?
ஆக திமுகவினர் முக ஸ்டாலின் இருக்கும் தைரியத்தில் எந்த அராஜகத்திலும் ஈடுபடலாம் அது சரி, ஆனால் பாஜக இருக்கும் தைரியத்தில் யாரும் அராஜகத்தில் ஈடுபட்டால் அது தவறா?
சொந்த கட்சியின் கருத்துரிமை நசுக்கலை ஆசீர்வதித்து ரசித்துவிட்டு, சோபியா கருத்துக்கு வால்பிடிக்க என்ன தகுதி இருக்கின்றது மிஸ்டர் ஸ்டாலின்?
ஆமாம், அதேதான்
ஏர்போர்ட்டில் தன் கட்சியின் சீனியர் திருச்சி சிவாவினை ஏர்போர்ட்டில் எதிர்கட்சி எம்.பி சசிகலா புஷ்பா மல்யுத்த வீரராக தூக்கி போட்டு மிதித்து, மைக் டைசன் அளவில் முகத்தில் குத்தியபொழுது மகா அமைதி காத்த கட்சி திமுக
அப்பொழுதெல்லாம் “ஏ பாசிச ஜெயா..” என்றோ குறைந்தபட்சம் “ஏ பாசிச சசிகலா புஷ்பாவே..” என்று கூட அக்கட்சி சொல்லவில்லை
இவ்வளவிற்கும் விமானநிலையத்தில் பகிரங்கமாக திருச்சி சிவா முகத்திலே கும்மாங்குத்து குத்தினார் புஷ்பா.
இப்பொழுது சோபியா என்பவருக்காக பொங்குகின்றார்கள்
திருச்சி சிவா இப்பொழுது எந்த முட்டுசந்தில் அழுது கொண்டிருப்பார் என்பதுதான் தெரியவில்லை..
திருச்சி சிவா எனும் ஜாம்பவானுக்கே இப்படி ஒரு நிலை என்றால் இந்த முகநூலில் கம்பு சுற்றுபவர்கள் நிலை மகா பரிதாபம்
மாணவர்கள் அரசியலுக்கு வரலாமா என கேட்டால் அண்ணாவின் பதில் இப்படி இருந்தது
“அரசியலில் அவர்கள் பார்வையாளராக இருக்கலாமே தவிர பங்கேற்பாளராக வர கூடாது
அத்தை மகளை சுற்றி சுற்றி வருவது போல வரலாமே தவிர தொட கூடாது”
இப்படி சொல்லும்பொழுது திமுக பெரும் கட்சி அல்ல,
ஆனால் இந்தி எதிர்ப்பில் மாணவர்களை திமுக அழைத்தபொழுது, பெரும் மாணவர்கள் படிப்பை விட்டு போராட வந்து செத்து, காயம்பட்டபொழுது அண்ணா வாயே திறக்கவில்லை
திமுகவினை ஆட்சியில் அமர்த்தியது மாணவர்களின் பங்களிப்பே என அண்ணா புரிந்தபொழுது தன் பழைய “அத்தை மகள்..” டயலாக்கினை எல்லாம் மறைத்தே விட்டார்
அப்போது இருந்து பல இடங்களில் மாணவர்களை உள்ளிளுப்பது திமுக வழக்கம், குறிப்பாக 1980 ஈழவிவகாரங்களில் மாணவர்களை மிக நுட்பமாக களமிறக்கினார்கள்
இப்பொழுது ஷோபனா விவகாரத்திலும் அதையே செய்ய நினைக்கின்றார்கள்
ஆனால் இப்போதிருக்கும் மாணவர்கள் புத்திசாலிகள் என்பதால் சிக்கல் இல்லை..
தமிழிசை தாய் ஸ்தானத்தில் இருந்து சோபியாவிடம் பேசி இருக்கலாம் – சோபியாவின் தந்தை
ஏன் சோபியா கூட சகோதரி ஸ்தானத்தில் இருந்து அமைதியாக நாகரீகமாக பேசியிருக்கலாம்